நாங்கள்
இங்கே அனைத்தும் இலவசம்
இரவுநேர கொசுக்கள் போல
உறங்காமல் செய்கின்றன……
அரசியல்வாதிகளின் அளவற்ற வாக்குறிதிகள்.
மறந்தே விடுகிறது சிலநேரங்களில்
நாம் ஏன் வாக்களித்தோம்?
நம்மை மறதியிலேயே வைத்திருக்கும்
அவர்கள்
அறிவாளிகள் தான்…..
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்
நடத்தும் இரங்கள் கூட்டம்
கோடிகளில் குவிந்த
உறுப்பினர் படை
ஊரே திருவிழாவானது
கண்டுக்கொள்ள யாருமில்லை
கண்ணீரும் கம்பளியுமாய்
கலைந்து சென்றது
நாளைய இந்தியா.!
- முனைவர் பீ. பெரியசாமி