முயற்சி
விபரீதங்கள்
முட்களாய்க் குத்தினாலும்
எண்ணங்கள் திசைமாறிப் பறந்தாலும்
மனதில் முயற்சி உடையவர்
மனம் ஒன்றிச் செயல்படுபவர்
வெற்றிக்கனியை எட்டுவர்||
மனஉறுதி
மனதில் உறுதி உடையவர்;
மலையையும் பிளப்பர்
வானம்
அவருக்குத் தொட்டுவிடும் தூரம்தான்||
சுமை
சும்மா இருப்பதே
சுகம் என்பவன்
பூமியில் பிறந்ததே
சுமை என்பான்||
குறிக்கோள்
குறிக்கோள் இல்லாதவன் மனம்
அவனுடன் செயல்பட மறுக்கும்
குறிக்கோள் உடையவன் மனம்
அவனுடைய உறக்கத்தைத் துரத்தும்||
குழந்தைச் செல்வம் வேண்டி
கோயில் கோயிலாய் ஏறும் தம்பதியரே
ஏங்காதீர்
பெற்றால்தான் பிள்ளையா
குப்பைத் தொட்டியிலும்
சாக்கடை நீரிலும்
தள்ளப்பட்ட மழலைகள்
கடவுள் உமக்குத் தந்த பரிசு
அதை ஏற்றுக்கொள்வீர்
மனிதனாகப் பிறந்ததன்
பயனை நுகர்வீர்||
பரிசு
அன்பு ஒன்றே தெய்வீகம்
அதுவே உம்மானசீகம்
அன்பில் திளைத்து
பண்பில் உயர்ந்து
உம்மை நாடும் சுற்றம்
உம்மைத்தேடும் நட்பு
அதுவே கடவுள் தந்த பரிசு||
முனைவர்.செ.நாகஜோதி
உதவிப்பேராசிரியை,
வே.வன்னியப்பெருமாள்பெண்கள்கல்லூரி,
விருதுநகர்.