# பூக்கள்
நிச்சயமாக
பெண்ணினம் தான்,
பூத்தாலும்
பூக்காவிட்டாலும்
பறிக்கப்பட்டுவிடுவதால்...
# எல்லா உயிரிலும்
ஈசனிருப்பார்
தூணிலும் துரும்பிலும்
திருமாலிருப்பார்
யாரையும் காணவில்லை
சேரியில்...
# பொதுவழிஅல்ல
எழுதிவைத்தாலும்
நுழைந்துவிடுகிறார்கள்,
இதயத்தில்
பெண்கள்....
# சொற்கள்
சைவமாகவும்
அசைவமாகவும்
சிந்தனைகளின்
நாவுக்கே....
நரேன்மேனகன்
7708729260