4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

பெண்ணினம்


# பூக்கள்

நிச்சயமாக

பெண்ணினம் தான்,

பூத்தாலும்

பூக்காவிட்டாலும்

பறிக்கப்பட்டுவிடுவதால்...

 

#  எல்லா உயிரிலும்

ஈசனிருப்பார்

தூணிலும் துரும்பிலும்

திருமாலிருப்பார்

யாரையும் காணவில்லை

சேரியில்...

 

 

#   பொதுவழிஅல்ல

எழுதிவைத்தாலும்

நுழைந்துவிடுகிறார்கள்,

இதயத்தில்

பெண்கள்....

 

 

#  சொற்கள்

சைவமாகவும்

அசைவமாகவும்

சிந்தனைகளின்

நாவுக்கே....

நரேன்மேனகன்

 7708729260

 சென்னை-51.