4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

அன்பே!!!




 


வலமும் இடமுமாய்

வளைந்து நெலிந்து செல்கிறது

உன் கார்மேகக் கூந்தலில்

என் மனம்….!

 

அன்பே..!

ஆராதனை இல்லாமல்

ஆயுள் கடத்தவா

ஆண்டவன் படைத்தான்….!

 

இரத்தமில்லா இருதயமோ..!

உன்னிடம் கொடுத்தது

இப்படி சத்தமில்லாமல்

கொல்கிறது…..!

 

கயல்விழிகளின் கருமையைக் கேட்டுப்பார்

உன் கனவுகளில் மட்டுமல்ல

உன் நினைவுகளிலும்

நான் தானென்று சொல்லும்…..!

 

எத்தனை நாள்

நித்திரையைத் தொலைப்பதோ

உன் மனதின்

ஈரத்தை உணர்வதற்குள்………!

 

தினம் ஏனடி

இப்படி இம்சிக்கிறாய்

நெஞ்சோடு கலந்து

தினம் வஞ்சிக்கிறாய்……..!

 

அடடா என்ன ஓர் அதிசயம்

இடையும் கழுத்தும்

இசைந்தே பாடுகின்றன

என் இறுதி ஊர்வலத்தை……..!

 

முனைவர் பீ. பெரியசாமி

தமிழ்த்துறைத்தலைவர்

டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி

விளாப்பாக்கம் – 632 521.

அழைக்க : 9345315385

மின்னஞ்சல் : periyaswamydeva@gmail.com