கூடுகொம்பு
காளை ரெண்டு
ரோடு தாண்டி
போகக் கண்டு
கருமேகமெல்லாம்
சூல்கொண்டு
தருமே யினி
மழைய கொண்டு!
வரும் பாதையில்
நொடியுமில்ல
வருங் காலமது
விடியும் புள்ள!
நோய் நொடியும்
நமக்கு இல்ல
போய் ஒழியும்
பொந்துக்குள்ள!
ஆடிமாசந் தேடி
விதைப்போம்
அல்லும்பகல்
நாமுழைப்போம்!
லாபநஷ்டம்
வியாபாரகணக்கு!
துரதிஷ்டம்
விவசாயி கணக்கு!
எங்க கூட
ஆடுமாடு கூட பேசும்!
எங்க அரசாங்கம்
எங்கே பேசும்?
உங்க பக்கம்
வீசும் காத்தும்
எங்க பக்கம்
பாத்து எப்ப வீசும்?
சுத்தமல்லி
உமாஹரிஹரன்
திருநெல்வேலி
9486556884