சாதிப்பதற்கு வழியில்லை. ஆனால்
சாதிக்கு இங்குப் பஞ்சமில்லை
படிப்பறிவு பூமியிது
பகுத்தறிவுக்குப் பஞ்சமிங்கு
சனநாயக நாடு இது
பணநாயகம் நடக்குது இங்கு
சகோதரத்துவம் பேசிடுவோம்
சாதியால் படுகொலை செய்திடுவோம்
அகிம்சை வழி நாடு இது
ஆணவப்படுகொலை நடக்குமிங்கு
பெண்ணியத்தைப் பேசிடுவோம்
கூட்டுப்பாலியல் நடத்திடுவோம்
நான் யாருக்கும் அடிமையில்லை
எனக்கொரு அடிமை வேண்டும் இங்கு
இனத்தால்> மொழியால்>
சாதியால்> மதத்தால்
ஒவ்வொருவரும் அடையாளப்படுத்திக்
கொண்டோம்
மனிதன் என்ற அடையாளத்தை மறந்து!
கவிஞர்; முனைவர் ஜெ. வீரசெல்வன்
9159526673
Selvanabi90@gmail.com