4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

மரணத்தின் பாதையில்...!

 

தமிழகத்தில் தஞ்சம் புகுந்த நோயாய்
மோப்பம் பிடித்து தேடுகின்ற நாயாய்
குரங்கின் வாலில் பற்றவைத்த தீயாய்
மரணத்தின் விளிம்பில் நிற்க வைத்த பேயாய்

உலகையே ஆட்டிப்படைக்கின்ற நோய்த்தொற்று
ஏன் இப்படி கொன்று குவித்தது இரக்கமற்று
மரணத்தின் பாதையில் நின்று எச்சரித்தாய்
மரண ஓலம் கேட்டு புன்னகைத்தாய்

அச்சத்தில் மூழ்கிய இதயங்களை விடுவிக்க
விருந்தொன்று இருக்காதா உமக்கு விடையளிக்க
நரகத்தின் வாசலை திறந்தாய்
மரணம் உனக்கும் உண்டென்றதை மறந்தாய்

                                                                                                            திரு. இரா.ஜான் பீட்டர்