பசி
கடையெல்லாம்
திறக்க சொன்ன
கடைக்கு
போகதான் காசில்ல……
தினக்கூலி
நாங்க…
திக்கற்று
நிக்க….
கடை
திறந்து பலனென்ன
கையிலிருப்பு
வைத்திருக்க
நானும்
கவரமண்டு உத்தியோக காரணல்ல…
தினம்
உழைச்சு கஞ்சு குடிக்கும்
தினக்கூலிகாரன்
பாட்டெல்லாம்
உங்களுக்கென்ன
தெரியும் …….
வீட்டுலதான்
நாலுபேரு….
உழைச்சு
சம்பாதிப்பதோ நான் மட்டும்
பொட்ட
புல்ல ரெண்டும் படிக்கதுங்க
என்
பொண்டாட்டி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி கிடக்குதுங்க…
மூனுமாசம்
வேல இல்ல....
திங்கறத்துக்கு
சோறுமில்ல…
நீங்க
கொடுத்த ஆயிரம் ரூவா
என்னத்துக்கு
பத்துமுங்க…..
வயிறு
கிள்ளுதய்யா…..
பசி
வந்து கொள்ளுதய்யா….
- முனைவர் பீ. பெரியசாமி