அரிவை சந்தித்தாள்…..
அறிவை சோதிக்கும் போட்டிகளில்,
ஆரூயிரென கலந்திருக்கும் தனிமையுடன்…..
காவியமாக திகழ்ந்த சிட்டுக்குருவி,
கூட்டினை மேம்படுத்தும் முயற்சிகளுடன்…..
சுற்றமனைத்தும் சில்லறை (பணம்) சத்தத்தில்,
சருக்கல்களாக அவளது ஒவ்வொரு அடியும்.
விழிகளில் நிறைந்த நீரைப் பார்த்து…..
வேடம் என்று மதிக்காமல் சிலர்.
உணர்வற்ற இராட்சச கூட்டங்களினால்,
உடலிலும்,மனதிலும் காயங்களை சேமித்தாள்.
காயமாற்ற மருந்துகள் இல்லையெனினும்,
கள்ளமற்ற அன்பினால் வெற்றிச்சுடர் ஏற்றுவாள்…..
இருப்பினும்,
தூய புன்னகையுடன் சுற்றிய,
வாயாடிபேதையை அவளுக்குள் தேடிக்கொண்டிருக்கிறாள்…..
காவியா செந்தில்குமார்