சூலையில் இம்மண்ணில்
உதித்த சூரியனே !
ஏழைகளின் மனதினைவிட்டு
அகலா சந்திரனே !
கல்விக்குக் கண்கொடுத்து
கலைமகளின் அருந்தவப்
புதல்வனானாய் !
சமூகத்தில் மண்டிக்கிடந்த
அறியாமை தளைகளை உந்தன்
அறிவின் முன்மண்டியிடச் செய்தாய் !
பசியறிந்து பாலூட்டும் தாயைப்போல
பகல் உணவை ஊட்டினாய்
பசிப்பிணியைப் போக்கினாய்!
பாடுபட்ட பாமரனின் கைகளில்
ஏடெடுத்துக் கொடுத்தாய் !
ஆடு மேய்ப்பவனுக்கு கல்வியறிவு
கொடுத்து ஆக்ஸ்போடுக்கு
அனுப்பி வைத்தாய் !
படிக்காத மேதையே நீதான்
இங்கு பலரை படிக்க வைத்து
மேதை யாக்கினாய்!
சிறந்த உணவும், சீருடையும் தந்து
சிறார்களை சிட்டாய்
பள்ளிதனை நோக்கி
பட்டாம்பூச்சியாய் பறக்க
வைத்தாய் !
விருதுநகரில் பிறந்த நீதான்
பலரை விருது வாங்கவும்
வைத்தாய் !
பாலைவனமாய் கிடந்த பள்ளிக்கூடங்களை
பசுஞ்சோலை வனங்களாக்கினாய் !!
கல்விக்காக நீ கண்ணை மட்டுமல்ல
உன்னையே தந்துச் சென்றாய்!
காமராசா நீதான் என்றும்
கல்விக்கும் ராசா.
பா.மகேஸ்வரி
இளங்கலை தமிழ்இலக்கியம்
மணக்கால் அய்யம்பேட்டை
திருவாரூர் மாவட்டம