4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

இரும்புக் கம்பிக்குள் உதிர்ந்த பூக்கள்




இரும்பு கம்பிகளுக்குள்
எத்தனை பூக்கள் உதிர்ந்ததோ

லத்தியின் வசம்
எத்தனை உடம்புகள் சிக்கியதோ

விரல்களால்
மயிர் பிடுங்கும்
போட்டி எத்தனை அரங்கேறியதோ

ஐஸ்கட்டிகள் சொல்லுமா
அவனை ரணப்படுத்திய
பங்கை

மின்சார கம்பிகளும்
தூக்குக் கயிறும் குருதியின்றி
யுத்தம் செய்த
பாங்கை

கழிவறைகள் சொல்லுமா அவன் ரணத்தை

காக்கி, காலனாய்
மாறியதை சிறைசுவர்கள் சொல்லுமா

யார் சொல்லுவார்
அவன் உயிர்வலியை

 

  புனிதஜோதி

 சூளைமேடு, சென்னை94