இரும்பு கம்பிகளுக்குள்
எத்தனை பூக்கள் உதிர்ந்ததோ
லத்தியின் வசம்
எத்தனை உடம்புகள் சிக்கியதோ
விரல்களால்
மயிர் பிடுங்கும்
போட்டி எத்தனை அரங்கேறியதோ
ஐஸ்கட்டிகள் சொல்லுமா
அவனை ரணப்படுத்திய
பங்கை
மின்சார கம்பிகளும்
தூக்குக் கயிறும் குருதியின்றி
யுத்தம் செய்த
பாங்கை
கழிவறைகள் சொல்லுமா அவன்
ரணத்தை
காக்கி, காலனாய்
மாறியதை சிறைசுவர்கள் சொல்லுமா
யார் சொல்லுவார்
அவன் உயிர்வலியை
புனிதஜோதி
சூளைமேடு, சென்னை94