6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

கொரோனாவும் சமூக மாற்றமும்



பொதுநலத்தால் அள்ளி

அள்ளிகொடுத்தாள்!

சுயநயத்தால் தீண்டியதால்

​​வெகுண்டாள் இயற்கை!

 

இயற்கைவெகுண்டதால்

இன்னலில் தவித்தோம்

இன்று பிறந்த புதுப்பிறவிபோல!

 

கணினியோடு கணினியாய்

அமிழ்ந்துபோன மனிதனுக்கு!

காக்கை குருவி நாய்களுக்கு

அன்னமிட​​ நேரம் கிடைத்தது!

 

காரிருளைக் காக்கும்

கனரக வாகனங்கள்

கணிசமாய் எண்ணிக்கையை

குறைத்துக்கொண்டது!

 

புண்ணிய நதிகளெல்லாம்

புத்தாடை அணிந்து

புதுமணம் பரப்பி

பூரித்து உலாவுகிறது!

 

காணும் திசையெங்கும்

இயற்கை

தன்னெழில் ஓவியத்தை

நுணுக்கமாய்நெய்கிறாள்!

 

மனதிற் பூட்டிய காரிருளை விரட்டி

மக்கள் மனதில் ஒற்றுமையை ஊட்டி

ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டி

ஒன்றிணைந்தோம்கொரோனாவால்!

 

கொரோ​​​னோ அசுரன் தலைநிமிர்ந்தது

சாதிமதபேதமின்றிசேவை வளர்ந்தது

 

நாகரீகமோகத்தில்

நலிந்த பாரம்பரியம்

நலமுடன் மீண்டும்

நாட்டில் புத்துயிர்பெறுகிறது

 

கொரோனாவால் கற்றுக்

கொண்டோம் மனிதநேயம்!

தொடரட்டும் மனிதசேவை!

மகிழட்டும் இயற்கை அன்னை!

மா.அனிதா


கருத்துகள் இல்லை: