தாயின் அரவணைப்பைத் தேடி
ஓடும் கன்றின் குறுக்கே
பாய்ந்தது அணைநீராய்
மழைத்துளி
ஓ மழையே!
நீயும் உன் அன்னையிடம்
தோற்றுவிட்டதால்
புவியெங்கும் கண்ணீர்
அபிஷேகத்தில் மூழ்கினாயோ!
நானோ சிறு கன்றுக்குட்டி
உன்னோடு போராட என்னால்
மாலாது
என்னில் நீர்த்துளி இன்றி
வெற்றுக் கானலாய் கண்கள்
ஒருமுறை
சாமாதானம் கொள்வோம்
சற்று வழிவிடு
விழித்திரையினை மூடுவாயா
என் பாசப்பிணைப்போடு
சேர விழைகிறேன்
என்றென்றும் நன்றியுடன்…….
முனைவர் கு. செல்வஈஸ்வரி - சாத்தூர்