4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

நன்றியுடன்


தாயின் அரவணைப்பைத் தேடி

ஓடும் கன்றின் குறுக்கே

பாய்ந்தது அணைநீராய்

மழைத்துளி

ஓ மழையே!

நீயும் உன் அன்னையிடம்

தோற்றுவிட்டதால்

புவியெங்கும் கண்ணீர்

அபிஷேகத்தில் மூழ்கினாயோ!

நானோ சிறு கன்றுக்குட்டி

உன்னோடு போராட என்னால் மாலாது

என்னில் நீர்த்துளி இன்றி

வெற்றுக் கானலாய் கண்கள்

ஒருமுறை

சாமாதானம் கொள்வோம்

சற்று வழிவிடு

விழித்திரையினை மூடுவாயா

என் பாசப்பிணைப்போடு

சேர விழைகிறேன்

என்றென்றும் நன்றியுடன்…….

முனைவர் கு. செல்வஈஸ்வரி - சாத்தூர்