அன்னை!
மொழியின் முற்றுருவம்!
ஆச்சரியக்குறி தவிர
வேறெந்த
அடையாளமும் இட்டெழுத
முடியாத ஈடில்லா
உயிரோவியம்!
ஊக்கத்தின் ஊற்றுக்கண்!
ஏளிமையில் ஏணி!
ஏறுபோல் நடக்கக்
கற்றுத்தந்த ஞானி!
ஐயந்திரிபறச் சொல்வேன்
ஒலியும் ஒளியுமாய்
ஓதலுக்கு
அட்சராபியாசம் செய்த
குருவும் அவளே!
ஓளடதம் அவளே!
உயிராகி மெய்யாகி
உயிர்மெய்யாகி
வெற்றிநடைபழக ஆயுதமாய்
நின்றவள் அவளே!
அம்மா!
அன்பின் அட்சயப் பாத்திரம்!
அனுபவச் சுரங்கம்!
ஆளுமையில் ஆண்மை!
உவமையும் உருவகமும்
உருவாக்கவியலா உருவம்!
செல்லச் சண்டைக்குச்
சின்ன ஸ்னேகிதி!
அகவையிலோ முதிர்வு!
அகத்திலோ குழந்தை!
ஜகத்திலோ தேவை
உன் சந்தோஷம்!
உன்னருகாமை!
உன்னகம்!
விடாதே
காப்பகம்!
எப்படியிருக்க?
சாப்பிட்டியா??
நீ
உதிர்க்கும்
ஒற்றைச் சொல்லில்
ஜீவிக்கும் அதிசயப் பிறவி!
அம்மா! அம்மா! அம்மா!
இரா. விஜயலெட்சுமி,
பட்டதாரி தமிழாசிரியை,
தி.சுக்காம்பட்டி,
அரசு மேல்நிலைப்பள்ளி,
திருச்சி -620 002,
6382993075.