4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

முடிக்க ஒருவரி



மொழியில்லாத உலகம் முழுமைபெறாது

முக்கியத்துவம் கொடுக்க...

முடிந்தவரை விளக்க...

முகவரியாக்க...

கடைசிபக்கம் முடிக்க...

ஒருவரி தேவைப்படுகிறது அழுத்தமாக!

 

கனவு கொண்டுபோன பேச்சுகளால்

முடியாத வார்த்தைகளைக் கொண்டு,

வாங்கமுடியவில்லை

வாக்கியங்களையும்...  விஷயங்களையும்...

 

இன்னும் ஒளியின் புயல் காற்றில்

வானத்தின் நீலப்புடவை கிழிய... கிழிய...

ஏதோ ஒருவிதத்தில் பேச்சும் எழுத்தும்

வார்த்தைப்பகிர்தலாய்...

மறையர்த்த புனைதலாய்...

வெறும் புரிதலாய்...

வார்த்தைகளை மட்டும் மீதமாக்க,

புரியாத படியானப் பேச்சுகளும்

புரிந்தும் புரியாததுமானச் சொற்களும்

முதலாவதாகஎழுதும்

ஒருகவிதையைப்போல… ….

அர்த்தம் சேர்க்கின்றன.

 

அப்போதும்

அதுவுமில்லாமல் இதுவுமில்லாமல்

அர்த்தத்தின் ஆழ்மை

இரத்து செய்யப்பட..

மொழியில்லா உலகம் முழுமைபெறாது....

அனுபவம் ஒன்று உறைந்து போகிறது.

 

-    மைத்திரிஅன்பு