4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

ஆதியில் கிளைத்தவன்

 

ஆதியில் கிளைத்தவன்,

மத்தியில் மணந்து

அந்தியில் ஜனித்தவன் அல்ல..

வீரமும் ஈரமும் எனது மரத்தில்

கசிந்தோடும் கனிச்சாறு..

வழங்களில் மழை

வளங்களில் தலை

நிலங்களில் மலை..

பசி எனில் கரைந்திடும் கரமும்

பழி எனில் கொய்திடுவோம் சிரமும்..

வர்ணங்கள் எனக்கில்லை,

வழிந்தோடும் நதியாய்

அற்றாருக்கு உற்றார் ஆவேன்..

வீழ நான் கோழையும் அல்ல

ஏழையும் அல்ல,

வீழ்த்த நீ வீரனும் அல்ல

சூரனும் அல்ல..

தமிழன் நான்..

 

வீ.பூமிநாதன்

உதவிப்பேராசிரியர்

கொங்குகலைஅறிவியல்கல்லூரி

ஈரோடு.

9751524368

vboomi87@gmail.com