ஆதியில் கிளைத்தவன்,
மத்தியில் மணந்து
வீரமும் ஈரமும் எனது மரத்தில்
கசிந்தோடும் கனிச்சாறு..
வழங்களில் மழை
வளங்களில் தலை
நிலங்களில் மலை..
பசி எனில் கரைந்திடும் கரமும்
பழி எனில் கொய்திடுவோம் சிரமும்..
வர்ணங்கள் எனக்கில்லை,
வழிந்தோடும் நதியாய்
அற்றாருக்கு உற்றார் ஆவேன்..
வீழ நான் கோழையும் அல்ல
ஏழையும் அல்ல,
வீழ்த்த நீ வீரனும் அல்ல
சூரனும் அல்ல..
தமிழன் நான்..
வீ.பூமிநாதன்
உதவிப்பேராசிரியர்
கொங்குகலைஅறிவியல்கல்லூரி
ஈரோடு.
9751524368
vboomi87@gmail.com