உயர்ந்தவன்
தாழ்ந்தவன்
இருவரையும்
பருக வைக்கிறது
தேனீர்கடை
ஒற்றை கோப்பை
கையேந்தி பவனில்
உண்ணும் ஒருவன்
பசி என்று
கையேந்தும்
மற்றொருவனுக்கும்
வாங்குகிறான்
விற்பவனோ
விரட்டுகிறான்
வெளுத்தவன்
வழுக்கி விழுந்தால்
தூக்கிவிட கைகளிருக்கு
தான் அழுக்காகி
சுற்றுப்புறத்தை
சுத்தமாக்கியவன்
சுருண்டு விழுந்துகிடந்தும்
கண்டும் காணாமல் போகும்
கண்களை என்ன செய்வது?
சமூகத்தில்
செய்தி பார்க்காதவர்கள் உண்டு
சாதி பார்க்காதவர்கள் அரிது
அனைவரிடத்திலும்
சமமாக பழகி வருகிறது பணம்
பலர் பகலில்
பேருந்திற்காக நிற்கும்
நடைமேடையில்
இந்த சமூகத்தின்
கடைநிலையர்
இரவுதூக்கம் விடிகிறது
கூவமாற்றின் ஓரம் குடிசை,
கொசுக்கடியின் கொடுமை
மூத்திரசந்தின் முன்னாடி வசிப்பு
போக்குவரத்து,
மின்சாரமில்லாத
சில கிராமங்கள் என
இன்னும் இருக்கத்தான் செய்கிறது
ஓட்டுபோட்டவர்களுக்கான
அடிப்படை வசதியில்லாத
அவலம்
தா.சரவணன்,
கல்யாணமந்தை,
தொடர்பு எண்:9786577516
திருவண்ணாமலை
(மாவட்டம் )- 635703