4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

வாசமின்றி விடுதலை

 

பத்துமாதம் சிறைவாசம்

ஆசையில் துள்ளித்தாவுது

அன்னையின் முகப்பிறை!

விடுதலை எனும் பெயரில்

இரண்டே திங்களுக்குள்

சிறைவாசம் முடிவடைந்தது

ஓடும் வெள்ளத்தில்

ஓரிலையில்

உயிர் வாழும்

சிற்றெறும்பின் உயிர்மூச்சு போல

கருவறை வாசம்

சுபமானது

கரைந்து மண்பொம்மையாய்

கலக்கமுற்றதாயின்

நினைவலைகள்

எங்கே சென்றது

தத்தித்தாவும் மழலையின் வாசம்……..

முனைவர். கு. செல்வஈஸ்வரி