வருவது தெரியாது
வரப்போகிறது
வசந்த காலமென்றெண்ணி...
நிசப்தமாய் சிரிக்கும்
நட்சத்திர வானம்.
எப்பொழுதும் எதையாவது
யோசித்துக் கிடப்பதை விட்டு
நிகழ்வுடன் கரைந்து போக
நினைக்கும்நிகழ்வெளி
கூப்பிட வருவதன்றி
கூடவே வரும் நிழல்.
மெளனமாய் வீசும் காற்றில்
ஏதுமசையாமல்
புழுக்கம் வெறுத்து
மாடியில் நடக்கும் நான்!
அலைகழிப்பினூடான
ஆயிரமாயிரம் எண்ணங்களோடு
அண்ணாந்திட...
அப்பொழுதும்
ரசிக்கக் கூடியதாகவேவானம்!
-
மைத்திரிஅன்பு
காஞ்சிபுரம்