நிதானப்படுத்தப்பட்ட
காலங்களில்
மீறிப்போனக்
கனவுகள்
தொல்லைகளை
நிதானமாகக்
கொடுத்து
கெடுத்துச்சென்ற
நினைவலைகள்
மின்னும்
வர்ணங்களில்
ஒளிந்துபோனக்
காரணங்கள்
சரளமாக
சரிந்துபோன
காதல் சுவடின்
அறிகுறிகள்
எல்லாவற்றையும்
திரட்டி
வைக்கிறேன்
கவிதைகளின்
முதல் வாசலில்
அவளுக்காக…….