ரௌத்திரம் பழகு!
அச்சம் என்பது அகற்றிட வேண்டும்
உச்சம் அடைய உயர்வழி அதுவே!
சமூக அக்கறை சார்ந்தே இயங்கி
தமரெனப் பலரைத் தன்னிடம் அடக்கு!
அநீதி கண்டு அகத்தில் சினத்தை
வினாடி முதலாய் வீறுடன் நிற்பாய்!
நியாயம் இன்றி நிந்தனை நடந்தால்
சாயம் போகச் சாட்டை எடுப்பாய்!
தர்மம் இலாது தண்டனை வந்தால்
சர்வம் கலங்கிட சரித்திரம் படைப்பாய்!
கொடியர் பலரின் கொடுமை செயலைப்
படிநிலை இன்றிப் பந்தாய் அடிப்பாய்!
உலகம் எனது உறவின ரென்று
திலகம் வைத்துத் திமிராய்,
பலதிசை நோக்கிப் பாரினில் கூறே!
சீனு. முரளி
முனைவர்ப்பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
காஞ்சிமாமுனிவர் அரசினர்
பட்டமேற்படிப்பு (ம) ஆராய்ச்சி நிறுவனம்
இலாசுப்பேட்டை,
புதுச்சேரி - 605008.
தொடர்பு எண்
- 9443216096,
மின்னஞ்சல்
- murali19081993@gmail.com