பசுமை
சிறைக் கம்பிகளை
முத்தமிடா பறந்த பசுமை,
சிறையிலிடுகிறது
பசுமையை எரிக்கும்
எதிரிகளை..
விரிந்த பாதங்களுக்கு விலகி
விளைந்து கிடக்கிறது,
புற்களும், பூக்களும்..
அகம், புறத்தை அழகாக்க
அழைக்கிறது,
வெட்டியதில் தளைக்கும்
கரும்பாய்,
விட்டதில் கிளைத்திருக்கும்
பசுமைக் கரங்கள்..
வீ.பூமிநாதன்
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
கொங்கு கலை அறிவியல் கல்லூரி
(தன்னாட்சி)
ஈரோடு.
9751524368