4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 அக்டோபர், 2020

பெண் குறிலா நெடிலா? - வ.சுரேஷ்

 


பெண் குறிலா நெடிலா?

 

நாமகள் நாவுஅசைக்க

வெண்ணிலவு சாமரம் வீச 

தென்றல் உன்மேனியை தீண்ட

நளினமாய் நாட்டியம் ஆடும் 

பெண் நீ 

நீ குறிலா இல்லை நெடிலா ?

நீ மெல்லினமா இல்லை வல்லினமா?

சிலநேரங்களில் நீ மெல்லினம் 

சிலநேரங்களில் நீ வல்லினம்

சிந்தனை சிறகுகள் முறிந்து 

சிந்தையில் மாசு படியும் போது

நீ வல்லினம் 

மாசுஇல்லாத உன் மனிதர்கள் அருகில் 

இருந்து நேசம் காட்டுகையில் நீ மெல்லினம் 

பெண் மணந்தவன் கையில் இருக்கும் தலையாட்டி பொம்மை

 

.சுரேஷ்

162 பியம்சாமி காலனி

ஐந்தாவது தெரு 

ஆர் ஸ் புறம் 

கோவை 641002 

செல் 9789333215