4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 அக்டோபர், 2020

கண்டேன் - பேரா.மு.சிவசக்தி

 


கண்டேன்

தன்னிலை மாறக்கண்டேன் 

தடம் புதியன பூக்கக்கண்டேன்

தெள்ளு தமிழ் ஓசையைக்கண்டேன்

அதில் தெவிட்டாத தேனூறக்கண்டேன்

முழு மனம்  போவதைக் கண்டேன்

மூன்று தமிழை உணரக்கண்டேன்

நாடும் வீடும்  நமதெனக்கண்டேன்

நல்லுணர்வு  பிறக்கக் கண்டேன்

நயம் பட உரைக்கக்கண்டேன்

நால்திசை போற்றக்கண்டேன்

பேரா.மு.சிவசக்தி

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

எஸ்.என்.எம்.வி கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்- 641050

மின்னஞ்சல் : gmpss90@gmail.com