சிற்பி
அடடே
கூட்ட நெரிசலுடன்
பக்தர்களின்
பக்திக் கோசமும்
ஓங்கி ஒலிக்கப்
பூ மாலைபொட்டோடுக்
காசு பணமுடன்
செல்வாக்கில் சொலிக்கிறதே
நான் வடித்த
கற்சிலை
எப்போது தெய்வமானது?
கோயில் கட்டிய
கொத்தனார்
எங்கேயோ எப்படியோ?
ஏழை, செல்வந்தர் என
அர்ச்சனை செய்ய
இரு வரிசை
சிலை செய்த ஏழை
எனக்கு எந்த
வரிசை?
தா.சரவணன்
கல்யாணமந்தை
திருவண்ணாமலை
- மாவட்டம்
தொடர்பு எண்
:9786577516