நனைத்த மழை
எனக்கு
வியர்வை நாற்றம்
அறவேயாகாது
மற்றவர்களின்
சிடலை நாற்றம்
குடலை பிடுங்கும் அளவில்
குமட்டல் வரும்
கொளுத்தும் வெயிலில்
கண்டபடி திரியும்
மாடுகளை ஓட்டமும் நடையுமாய்
அலைச்சலோடு
ஒழுங்கு படுத்தி
உஷராக
மேய்த்து வருவாள்
பள்ளிக்கூடம் முடிந்து
வீடு திருப்பும் வேளையில்
என்னை
மழை நனைத்துவிட
வியர்வை துளிகள் வடிந்தே
அழுக்கேறிய முந்தானையில்
என் ஈரமுகத்தை
அம்மா துடைக்கும் போது
எந்த நாற்றமும்
என்னை
அச்சுறுத்துவதில்லை
தா.சரவணன்
9786577516
கல்யாணமந்தை
திருவண்ணாமலை(மாவட்ட ம்)
635703
2 கருத்துகள்:
நல்ல கவிதை
அருமையாக உள்ளது sir unga கவிதைகள்
கருத்துரையிடுக