4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 மார்ச், 2021

வானொலியும் அதன் பயன்பாடுகளும் - க. வினோத்குமார்,

 

 

           

வானொலியும் அதன் பயன்பாடுகளும்

 

                                    க. வினோத்குமார்,

                                    உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை.

                                    சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி,

                                    இராமநாதபுரம். 623 501.

                                    அலைபேசி எண்: 9626608755

                                    vnthkumar53@gmail.com

 

முன்னுரை                    

           தொலைதூர மக்கள் தகவல் தொடர்பு சாதனங்களுள், வானொலி முன்னர் ஒரு காலத்தில் முதலிடமும் முக்கிய இடமும் வைத்திருந்தது.  இன்று தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி, இணைய தளம் வரவு இருந்தாலும், அதே நிலையில் நிலைத்து காணப்படுகிறது. வானொலி கண்டுபிடிப்பதற்கு முன்னால் புகைகளை எழுப்பியும், உயரமான இடங்களிலிருந்து கொடிகளைக் காட்டியும், தீப்பந்தத்ததை அசைத்தும், மணியோசைகளை எழுப்பியும் முரசறைந்தும் தொலைதூரதத்திற்கு தகவல் பரிமாறிக்கொள்ளப்பட்டன. நவீன தொலைதூர தொடர்பு சாதனங்களின் வரலாறு 1844-ல் முதல் தொடங்கியது.  இந்த ஆண்டில்தான் மோர்ஸ் என்பவர் மின் கம்பிகளின் வழியாக செய்திகளை குறியீடுகளாக மாற்றி அனுப்பலாம் எனக் கண்டுபிடித்தார்.  இது மோர்ஸ் ஒளிக்;குறியீடு என்று அழைக்கப்படுகின்றது. 

   

          “இறைவன் படைத்த உலகில்

          மனிதன் வாழ்கிறான் ஆனால்

          மனிதன் செதுக்கிய சிலையில்

          தான் கடவுளே வாழ்கிறான்”

          என்பதற்கு ஏற்ப

          மனிதனின் உன்னத படைப்பு வானொலி ஆகும்.

 

      வானொலி ஒளி பரப்பில் அறிமுகத்திலும் வளர்ச்சியிலும் தமிழகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்கு  உண்டு.  ஒலி அலைகளை மின்அலைகளாக மாற்றும் முயற்சி தொடர்ந்து நடந்து வந்;தது.  மின் ஒலி அலைகளின் இத்திறனை மார்க்கோனி சோதித்தறிந்தார்.  ஒலி அலைகளின் வேகம் மின் ஆற்றலாக மாற்றும் முயற்சி வெற்றி அடைந்து 1922ல் வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. 

 வானொலி அறிமுக வளர்ச்சி

 

      இந்தியாவில் முதன்முதலாக 1924ம் ஆண்டு மே திங்களில் சென்னை வானொலிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு ஐ_லைத் திங்களிpல் ஒலிபரப்பை தொடங்கியது.  1927ம் ஆண்டு பம்பாயிலிருந்து அமைப்பு முறையிலான வானொலி ஒலி பரப்பு தொடங்கியது.  1.5 கிலோவாட் ஆற்றல் உள்ள இவ்;;;;;;;;;;ஒலி பரப்பு 30 மைல் சுற்றளவை எட்டியது.  அதனைத் தொடர்ந்து சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.  இந்திய ஒலிபரப்பு சேவை என்ற பெயர் அகில இந்திய வானொலி நிலையம் என்று மாற்றப்பட்டது. 

 

வானொலி ஒலிபரப்பு தத்துவம்

 

            வானொலி நிலையத்தில் ரேடியோ அலைகளை உருவாக்கி பின் அலைகளை ஒலிகளோடு பண்பேற்றம் செய்து அதன்பின் அலைகளை பரப்புவதற்கு பயன்படும் சாதனம் பரப்பி என அழைக்கப்படுகிறது.  ‘ஹென்ரிச் ஹெர்ட்ஸ’; என்பவரால் முதல் பரப்பி உருவாக்கப்பட்டது.  இது துண்டு;களான ரகசிய சைகைகளை மட்டும் பரப்புவதற்கு பயன்படுத்தப்பட்டது. 

 

வானொலியின் பயன்கள்

                                        

             “உலகம் உங்கள் கையில் சுற்றும்

           சூரியன் உங்கள் நெற்றியில் நிற்கும்”.

 

      கப்பல்கள் மற்றும் நிலங்களுக்கு இடையில் மோர்ஸ் குறியீடுகளைப் பயன்படுத்தி தந்தி குறிப்புகளை அனுப்புவதற்கு கடல்வழி ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்டன.  1905ம் ஆண்டு சுஷிமா போரின்போது ரஸ்ய கப்பல் படையை ஐப்பானிய கடற்படை கைப்பற்றியது.  அந்த தகவல் ரேடியோ குறியீடுமூலம் அனுப்பப்பட்டன.  முதல்; முதலாக 1912ம் ஆண்டில் ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்டது.  மூழ்கிய கப்பல் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் பற்றி பட்டியலிட்டு நிலையங்களுக்கு அனுப்பும் தகவல் தொடர்பு சாதனமாக ரேடியோ தந்தி பயன்படுத்தப்பட்டது. 

 

      1920 மற்றும் 1930ல் பரவலாக வானொலியின் பயன்பாடு அதிகரித்தது.  போருக்கு முந்தைய ஆண்டுகளில் ரேடியோ மற்றும் ராடார் பயன்படுத்தி விமானம் மற்றும் கப்பல்களைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டது. 

 

தமிழகத்தில் உள்ள முக்கிய வானொலி நிலையங்கள்

    • சென்னை வானொலி நியையம் 
    • திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்
    • திருநெலவேலி வானொலி நிலையம்
    • கோயம்புத்தூர் வானொலி நிலையம்
    • கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம்
    • மதுரை வானொலி நிலையம்
    • உதகமண்டல வானொலி நிலையம்
    • தூத்துக்குடி வானொலி நிலையம்

ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வானொலி நிலையங்களாகும்.

வைரவிழா கண்ட திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்

            நாடு விடுதலை பெறுவதற்கு எட்டாண்டுகளுக்கு முன்புதான் 1939 மே மாதம் 16ம் தேதி திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் தொடங்கப்பட்டது.  இதை தொடங்கிவைத்து அப்போதய சென்னை மாகாண முதலமைச்சர் மூதறிஞர் இராஐhஐp வானொலியின் ஆற்றலை வியந்து போற்றினார். 

          “வானொலியால் நாடு முழவதும் மகிழ்;ச்சியைப் பரப்பலாம் மகிழ்ச்சி என்பது உயிருக்கு அடையாளம்.  மகிழ்ச்சியே ஆத்மாவின் உறைவிடம்.  உயிர் உள்ளத்திற்கும் உயிரற்றதிற்கும் வித்தியாசம் மகிழ்ச்சியே.  மகிழ்ச்சியில்லா ஊர் உயிரற்ற ஊராகும்.  உணவுப்பொருள் மட்டும் உயிருக்கு போதாது. மகிழ்ச்சியும் வேண்டும்.  உணவு உடலாகிறது. மகிழ்ச்சி மனமாகிறது.  பரிசுத்தமான விளையாட்டுக்களும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்பாடு செய்ய வேண்டும்.  மகிழ்ச்சியைப் பரப்ப இந்த வானொலி நல்ல இயந்திரமாகும்.”

இவ்வானொலி நிலையம் அறிமுகம் செய்த வசந்த அமைப்பு என்ற நேர்முக தொலைபேசி நேயர் விருப்ப நிகழ்ச்சி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

            “மகிழ்ச்சியோடு நல்வழியில் வாழும்போது

            இவ்;உலகம் நம்மைப்போற்றும்”

 

வாழ்;க்;;கையில் முன்னேற்ற குறிப்புகளை தருவதுடன் நேயர்கள் நம்பிக்கையுடன் தங்களது வாழ்க்கையைத் தொடங்குவதற்குரிய ஆலோசனைகளையும் அறிவிப்பாளர்கள் அளிக்கின்றனர்.  செப்டம்பர் 2003ல் இவ்வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகள் கணினி உதவியுடன் சமீபத்திய புதிய தொழில் நுட்பம்  பயன்படுத்தப்பட்டு இன்றுவரை ஒலிபரப்ப படுவது குறிப்பிடத்தக்கதாகும். 

 

வானொலி இன்று

 

      இன்று நாடு முழுதும் 208 ஒலிபரப்பு நிலையங்கள் உள்ளன.  பல்;வேறு அலைநீளம் கொண்ட 326 டிரான்ஸ் மீட்டர்கள் உள்ளன.  அகில இந்திய வானொலியின் டெல்லி நிலையம் மட்டும் 88 செய்தி தொகுப்புகளை ஒலிபரப்பு செய்கிறது.  இத்துடன்; 42 மாநில முழு நிலையங்கள் வழியாக 202 செய்தி பரப்புகள் ஒலிபரப்பாகின்றன.  அகில இந்திய வானொலி 24 இந்திய மொழிகளில் தனது உள்நாட்டு ஒலிபரப்பை நடத்தி வருகின்றது. இவை மட்டுமல்லாது ஆங்கிலம், பிரெஞ்சு, ரஸ்யன் போன்;;;ற அயல்ந்hட்டு மொழிகளிலும் 14 தேசிய மொழிகளிலும் சர்வதேச ஒலி பரப்பை செய்து வருகிறது. 

            நாடு சுதந்திரம் அடைந்தபோது 2.29 இலட்சம் வானொலி பெட்டிகள் மட்டுமே இருந்தன.  தற்போது 11.10 கோடி வானொலிப்n;பட்டிகள் உள்ளன.  1997ம் ;ஆண்டு டிஜிட்டல் N;ரடியோ “பிராட்காஸ்டிங”; ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது. இணையதளம் வழியாக நேயர்கள் விரும்பும் பாடல்களை; ஒலி பரப்பும் “ரேடியோ ஆன்; டிமாண்ட்;;;;; சர்வீஸ”; என்;ற இணையதள N;சவையும் தொடங்கப்பட்டது.  1998ம் ஆண்டு “நியூஸ் அண்டு” டெலிபோன் என்ற தொலைபேசி வாயிலாக செய்திகளைக்கேட்டு தெரிந்துகொள்ளும்; முறை அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றியடைந்தது.

 

முடிவுரை

 

      “பனிச்சறுக்கும் ஒரு சறுக்குத்தான.; ஆனால்            

      அதையே விளையாட்டாக்கி, சறுக்கிச்

      சாதனை படைப்பவர்களும் உண்டு.”

           

    தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், போன்ற பல எத்தனையோ தகவல் தொடர்பு சாதனங்கள் வந்தாலும் கிராம, நகரப்புற மக்களிடையே நீங்காத இடம் பிடிக்கும் முக்கிய சாதனமாக வானொலி பயன்படுகிறது.  இது மக்களிடம் வானொலி கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது.  இன்றும் வானொலி மக்களுக்கு உற்ற தோழனாகவே இருந்து வருகிறது.  இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 6 வானொலி நிலையங்கள் இருந்தன.  இரண்டு நிலையங்கள் (சென்னை, திருச்சி) தமிழ்நாட்டில் இருந்தன. இன்று இந்தியா முழுதும் 98 வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன.  அது தவிர 4 உள்;ர் ஒலிபரப்பு நிலையம் 142 மத்திய அலை அஞ்சல் நிலையங்களும் 40 சிற்றலை அஞ்சல் நிலையங்களும் இந்தியாவில் வானொலி ஒலிபரப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது இந்திய கிராமப் பகுதியில் 100 பேர்கள் கொண்ட ஒரு குழுவிற்கு 5 வானொலிப் பெட்டிகள் தேவை என்ற யுனெஸ்கோவின் இலக்கு நிறைவேறி விட்டதாக அறியப்படுகிறது. இனி வருங்காலங்களிலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையதளம் என எத்தனையோ வருங்கால கையடக்க

சாதனங்கள் வந்தாலும் அதில் வானொலி சிறப்பான இடத்தினைத் தக்கவைத்துக்கொள்ளும் என்பதை அறியலாம்.

 

சான்றெண் விளக்கம்

     

முனைவர் கி. இராசா, தகவல் தொடர்பியல்

முனைவர் ந. சந்திரன், வலிதாங்கும் மூங்கில்

முனைவர் ரா. செல்வராகவன், மின்னனு சாதனம் கருத்தியல்

முனைவர் ச. ஈஸ்;வரன், மின்னனு அறிவியல்

முனைவர் ரா. ரவிபாரதி, மக்கள் தொடர்பியல்.