நிராகரிக்கும்
உன் மீதுதான்
நிரம்பி வழிகிறது
என் அன்பு
ஏற்றுக்கொள்ளப்படாத
உன்னிடத்தில்தான்
ஏங்கி நிற்கிறது
என் காதல்
கிடைக்காத
உனக்காக
அடம் பிடித்து
அழுகிறது
என்
மனக் குழந்தை
ஈட்ட
இதயமில்லாத
உன்னிடத்தில்
இரத்தல் செய்கிறது
என் இதயம்
நான்
இறந்த தகவல்
கேட்டபின்பாவது
உன் கண்ணிலிருந்து
இறங்குமா
ஒரு துளி
கண்ணீர்
என்னிடமிருந்து
ஒற்றை மலரை
நிராகரித்த
நீ தான்
என் மரணத்திற்கு
மாலையோடு
வருவாய்
தா.சரவணன்
தொடர்பு எண்:9786577516 கல்யாணமந்தை
திருவண்ணாமலை (மாவட்டம்)
635703