மரணத்தை மரணிப்போம் !!
மண்ணில் புதைக்கப்படும் விதை
மண்ணைக் கீறி முட்டிமோதி
விருட்சமாவதில்லையா ?
மாலையில் சுருங்கி மறைந்து வீழும்
மலர்கள் மலர்ந்து மணம்
பரப்புவதில்லையா ?
கூட்டுப் புழுக்கள்
பளபளப்பதில்லையா ?
ஜனிக்கும் உயிர்கள் மரணிக்கும் !
ஐந்தறிவு படைத்த
மறந்ததுண்டோ ?
மரணத்தை எதிர்கொண்டு
எதிர்த்துப் போராடி பயன்தந்து
வாழவில்லையா ?
இறந்தவர் பிறப்பதும்
பிறந்தவர் இறப்பதும் இயற்கையே !
பகுத்தறிவு படைத்த மானுடா !
இயற்கையை மீற நினையாதே !
இயற்கையைக் கண்டு அஞ்சாதே !
இயற்கையை ஏற்கப் பழகு !
காலனைச்
கவிஞனின்
ஒலிக்கவில்லையோ ?
காலனைக் காலால் உதைத்த
மார்க்கண்டேயன் மனத்திரையில்
உயிர் பறிக்க வந்த எமனிடமே
வரம்பெற்ற கதை
வாழ்க்கைப் போர்க்களத்தில்
வெற்றி வாகைசூட வேண்டாமோ ?
மரணத்தை
மண்ணில் ஜனித்த நீ - உன்
பங்கைப்
மரணத்தை மணக்க நினையாதே !
மரணமே
மனவெழுச்சி கொண்டு புறந்தள்ளிவிடு !
மனத்தைக் குப்பைத் தொட்டியாக்காதே !
கவலைகளை மறந்து களித்து
சிரித்து
சாவிற்குச் சாபமிட்டு
சவால்விட்டு
பிறப்பிற்கான அர்த்தத்தைத் தேடு !
மாற்றும் வித்தையைக்
மானுடா !
மரணிக்கப் பிறந்தவன்
மரணத்தை மரணிக்கப் பிறந்தவன் நீ !!
மானுடா !
மரணிக்கப் பிறந்தவன்
மரணத்தை மரணிக்கப் பிறந்தவன் நீ .
இரா. விஜயலெட்சுமி,
பட்டதாரி தமிழாசிரியை,
தி.
மணப்பாறை கல்வி மாவட்டம்.
திருச்சி மாவட்டம்.