அவள்
பதினெண்நாடுகளில் அரசியவள்
பழமைக்கும் பழமையவள்
புதுமைக்கும் புதுமையவள்
பொருளுக்கும் இலக்கணம் கூறியவள்
வாழ்வின் இலக்கணமவள்
நீதிகருத்துக்கள் உடையவள்
பலமொழிகளின் தாயவள்
தனித்தும் இயங்கும் தன்மையவள்
பிறமொழியுடனும் இயக்குபவள்
தேன்போன்று இனிப்பவள்
தெம்மாங்கு பேசுபவள்
பக்தியின் ஊற்றவள்
அன்பின் முதிர்ச்சியவள்
கன்னியாக இருந்தவள்
குமரியாக இருக்கின்றவள்
இளமையாக இருப்பாளவள்
தமிழ்மொழியவள்.
மோ. இந்துமா
முனைவர்பட்டஆய்வாளர்
செல்லம்மாள் மகளிர் கல்லூரி, கிண்டி