விதையாய் விழுந்த விவேக்
விதைக்கத்
தோண்டியவனைப்
புதைக்க
வைத்துவிட்டான்
இரக்கமற்ற
இறைவன்
விழிப்புணர்வை
ஏற்படுத்திய
இவன் விழியை மூடிய
அவன் கொடியவன்
இயற்கையோடு
இணைந்திருந்தவன்
இயற்கை
எய்தினால்
என்ன நியாயம்
எப்போதும்
சிரிக்க
வைத்தவன்
இன்று ஏன்
அழவைத்தான்
இவன் நட்ட
மரங்களின்
வேர்கள்
அழைத்ததனால்
நம்மை
அழவைத்துவிட்டு
போய்விட்டனோ
இவன் நகைச்சுவையில்
துன்பத்தையும்
மறந்து
சிரிப்பின்
மூலமே
சிந்திக்க
வைத்த
இவன்
பகுத்தறிவு
சித்தாந்தத்தை
இனி கண்டு
கண்கலங்காமல்
இருப்பது
எப்படி
தா.சரவணன்
கல்யாணமந்தை
திருவண்ணாமலை(மாவட்டம்)
635703
தொடர்பு எண்:9786577516
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக