வரவேற்கிறோம்…..!
அனைவருக்கும் வணக்கம்,
நம் இலக்கியச்சுடர் மாதஇதழ் இரண்டாம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. இதற்கு பல்வகையிலும் உதவியாக இருந்த படைப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். ஜூன் 2021 மாதஇதழ் இன்று (01.06.2021) வெற்றிகரமாக வெளியாகிறது.
பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே இவ்விதழ் வெளியாக உதவிகரமாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
படைப்புகளை அனுப்பும் படைப்பாளர்கள் தங்கள் முழுமுகவரி, புலன எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவைகளைத் தவறாமல் படைப்புடன் இணைத்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அனைவருக்கும் ஒரு நற்செய்தி! கடந்த ஆண்டில் (ஜூன் 2020 – மே-2021) வெளியான படைப்புகளில் சிறந்த படைப்புகளை நூலாக்கம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. EISBN உடன் இணைய புத்தகமாக வெளியிட உள்ளோம். அச்சுப்பிரதி தேவையுள்ளோர் தொடர்புகொள்க.
மேலும், அக்டோபர் (2020) மாதம் முதல் ஆய்வு – எனும் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் (ஆய்வறிஞர்களால் மதிப்பாய்வு செய்யப்படும் காலாண்டிதழ்) வெளிவரத் துவங்கியுள்ளது. இதனை http://aaivu.unaux.com/ எனும் இணையதளத்தில் காணலாம். ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி indhiranik5@gmail.com.
தகுதி வாய்ந்த படைப்புகளை வெளியிட நாங்கள் காத்திருக்கிறோம். எனவே உரிய வழிமுறைகளைப் பின்பற்றி அனுப்பப்படும் படைப்புகள் மட்டுமே பிரசுரிக்கப்படும்.
படைப்புகளுக்கு ஏற்றார் போலும், தேவைக்குத் தகுந்தும் வரும் ஓவியங்கள் மட்டுமே இதழில் பிரசுரிக்கப்படும்.
படைப்பாளர்களும் தமிழார்வலர்களும் தங்களால் இயன்ற தொகையினை நன்கொடையாக அளித்து இதழின் வளர்ச்சிக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இது ஒரு இலாப நோக்கமற்று செயல்படும் மாதஇதழ் என்பதை மீண்டும் தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
Google pay :9345315385
வங்கி கணக்கில் செலுத்த
பெயர். PERIYASWAMY BEEMANவங்கி கணக்குஎண் - 251100050307091வங்கி - TAMILNADU MERCANTILE BANK, ARCOT BRANCHIFSC : TMBL0000251MICR : 632060103
நன்றி!
என்றும் நட்புடன்,
முனைவர் பீ. பெரியசாமி
முதன்மை ஆசிரியர்
***அனைவருக்கும் ஒர் அன்பான வேண்டுகோள்***
உயிர் விலைமதிப்பற்றது. தனித்திருங்கள் விழித்திருங்கள். கொரோனாவில் இருந்து தப்பித்திருங்கள். முகக்கவசம் அணியுங்கள், அதுவே நம் உயிர்க்கவசம். அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் செவிசாய்ப்போம், கொரானா இல்லாத சமூகத்தை விரைவில் காண்போம். நன்றி!