4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 ஜூன், 2021

தாய் உள்ளம் - சு.கீதா

 

 

தாய் உள்ளம்

   பிரம்மனின் அவதாரமாக உலகில் உதித்தவள்

             அன்பின் வடிமாக மண்ணில் வாழ்பவள்

             தியாகத்தின் உச்சகட்டமாக மிளிர்பவள்

             நீயே…!!

            

  பூவிதழின் மென்மையினும் மென்மையான

             புனித உள்ளம்அன்பு உள்ளம்

             அரவணைக்கும் அன்னை உள்ளம்

             கொண்டவள் நீயே…!

 

             பத்து மாதம் வயிற்றில் சுமந்து

             புதிய உலக்கிற்கு அழைத்து வந்தவள் நீயே..!

             பருவம் வரும் வரை நெஞ்சில் சுமந்து

             பக்குவமாய் படிக்க வைத்தவள் நீயே…!

             உயர்ந்த நிலையை அடைய

             ஊக்கத்தை கொடுத்தவள் நீயே…!

             வாழ கற்றுக் கொடுத்து

             வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவள் நீயே…!

 

             மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு,

             முத்தமிழ் மணமுண்டு…!

             தமிழ் வாழ்வுக்கு மூன்றெழுத்துஅந்த

             வாழ்வுக்கு அடிப்படையாம் அன்புக்கு மூன்றெழுத்து

             அன்புக்குத் துணை நிற்கும் அறிவுக்கு மூன்றெழுத்து

          அறிவார்ந்தோர் இடையிலெழும், காதலுக்கு மூன்றெழுத்து

             காதலர்கள் போற்றி நின்ற கடும், வீரமும் மூன்றெழுத்து

             வீரம் விளைகின்ற களம் மூன்றெழுத்து

             களம் சென்று காணுகின்ற வெற்றி மூன்றெழுத்து

             அந்த வெற்றிக்கு நம்மை எல்லாம் ஊக்குவிக்கும்

             அம்மா  என்ற மூன்றெழுத்து…!  

 

                                  சு.கீதா