4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 ஜூன், 2021

காப்பது நம் கையில் - பாவலர் முனைவர் விஜயா குமரன்

 

 

காப்பது நம் கையில்

 

உடலுள் புகுந்து உயிரையே தின்னும்

விடத்திலும்கொடிதாம்வேகமுடைக்கொரோனா

அடங்காத தீக்கிருமிஅடக்குதேமூச்சையும்

இடரதைத் தொலைத்து உடல்நலம் கண்டிட                  1.

 

தொடரும் முடிவிலாத்தொற்றைத்துரத்திட

திடவுளங்கொள்வீர்திரியாதுதேவையின்றி

அடங்கிக்கிடப்போம்ஆமைகளாய்க்  வீட்டில்

பதுங்குவதுபயமல்லவேட்டையின்வெற்றிக்கே!             2.

 

மனிதம் நெஞ்சிலுடைமானுடரேமற்றோர்க்கு

இனியும் தொற்று இவ்வுலகில் பரவாது

கனிவுடன்கருத்தில் கொண்டு கடைப்பிடிப்போம்

அணிவோம் முகக்கவசம் எப்போதும் தவறாதே              3.

 

முன்னிற்கும்மனிதருடன்மூன்றடி இடைவெளி

திண்ணமாய்க்காத்தேதள்ளியே இருப்போம்

உண்மையாய்சமுதாயஉணர்வுடைமானுடரே!

உம்மாலும்பல்லுயிர் ஓம்புதல் சாத்தியம்                            4.

 

எண்ணற்றஉயிர்களை இழக்கும் இந்நேரம்

நன்மைகள்நாட்டிற்குச்செய்திடும்உறுதியை

எண்ணத்தில் கொண்டு ஊரடங்கை மதித்து

மண்ணுயிர் காக்க மாதவமாய்இதையேற்போம்              5.          

பாவலர் முனைவர் விஜயா குமரன்