4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஜூலை, 2021

வியர்வையின் விதைகள்

 

வியர்வையின் விதைகள்

 

நம்பிக்கையை நதியாக்கி

வியர்வையை விதையாக்கி

உழைப்பை உரமாக்கி

களைப்பெனும் களையகற்றி

வியன்ஞாலத்தை விதவிதமாய்

விந்தையாக்கிய கைகள்

உழைப்பாளியின் கைகளன்றோ !

 

பாரகத் தேரில்

பயணம் செய்வோரைப்

பருத்தியும் பட்டும்

பொருத்திப் பார்த்துப்

பகட்டாய்ப் பளபளப்பாக்கியது

பாட்டாளியின் கைகளன்றோ ?

 

அதளபாதாளம் அடிவரை சென்று

கட்டித் தங்கம்வெட்டியெடுத்து

அகிலம்முழுதும் அரிவையரை

அலங்கரித்து அழகாக்கியது

அயர்ச்சிகாணா கைகளன்றோ !

 

காட்டிலும் மேட்டிலும்

கால்கடுக்க நடந்தவன்

காரில் சொகுசாய்க்

காற்றெனப் பறப்பதும்

விண்ணுக்கும் மண்ணுக்கும்

விரையூர்தி கண்டதும்

வியர்வையின் விந்தையன்றோ ! 

 

இரா. விஜயலெட்சுமி