உயிர் கொல்லி
அலை அலையாய் வந்து
கொலை கொலையாய்
கொன்று
குவிக்கும்
கொடிய கொரோனாவே
உன்னால்
வீட்டிலே ஒடுங்கியிருந்தோம்
உறவுகளை
ஒதுக்கிவைத்தோம்
வாழ்வாதாரத்தை விட்டு
உயிர் வாழ்வதற்கு
வயிற்று பசியோடு
வாய் பொத்திக் கிடந்தோம்
ஊடகங்களின் உச்சரிப்பு
அது உயிருக்கு எச்சரிப்பு
உலகெல்லாம்
கொரோனா நச்சரிப்பு
மக்கள் நிம்மதியிழப்பு
அழிவுற்ற
இயற்கையின் சாபம்
அழித்துக்கொண்டிருக்கிறது
மனித இனத்தை
புனிதமான கங்கையும்
பிணங்களால்
களங்கமானது
மனிதன்
கஷ்ட நஷ்டங்களை
தீர்த்துவைக்கும் படி
நாடிய கடவுளும்
தன்னை தற்காத்துக்கொள்ள
தன் இருப்பிடத்தை
பூட்டிக்கொண்டான்
உயிரை கொள்ளையடிக்கும்
கொரோனா கொடூரனிடமிருந்து
தப்பிக்க
அன்றாடம்
அச்சத்திலே அல்லல் படும்
மனிதம்
அரசாங்க ஆணைக்கு
அடங்கியிருந்தோம்
அன்றாடத்தேவையை
இழந்திருந்தோம்
ஆக்சிஜனுக்காக
அலையாய் அலைந்தோம்
என்று இறக்க கூடுமோ
ஈவு இரக்கமற்ற
கொடூர கொரோனா
கொரானா
இயல்பு நிலை மாற
இன்னும்
எத்தனை நாளாகுமோ
எத்தனை உயிர்
போகுமோ
வையகத்தின்
வளர்ச்சியை
வற்ற வைத்து
வல்லரசு நாடுகளை
திணற வைத்த
தீய
கிருமியே
மனிதனுக்கு
தீயை மூட்டியது போதும்
தொலைந்து போ