6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

இந்துக்களின் மருத்துவ பாரம்பரியத்தில் தன்வந்திரி - செல்வி பே.சுதர்சினி

 

இந்துக்களின் மருத்துவ பாரம்பரியத்தில் தன்வந்திரி

செல்வி பே.சுதர்சினி  B.A(Hons)

இலங்கை.

sutharshiniperinpam@gmail.com

அறிமுகம்

 

இந்துப்பண்பாட்டு மரபில் மருத்துவத்தில் சித்தமருத்துவம் பாரம்பரி ய தனித்துவமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. சித்தர்கள் ;அனைவரும் மருத்துவ ஞானமுடையவர் களாக இருப்பினும் அகத்தியர், திருமூலர், போகர், புலிப்பாணி போன்ற சிலரின் படைப்புக்களே இற்றைவரை அறியப்பட்டு வந்துள்ளன. சித்த வைத்தியத்தில் அகத்தியர்  மற்றும் திருமூலர்  சிறப்பிற்கு ரி யவ ர் களாகக் கொள்ளப்படுகின்றனர். அகத்தியர் பெருந்திரட்டு, வைத்திய சிந்தாமணி, ஆகிய அகத்தியர் நூல்களும் திருமூலர் வைத்தியம் 600, திருமந்திரம் 1000 போன்ற நூல்கள் திருமூலரின் படைப்புக்களாகும். இவை சித்த வைத்தியம் பற்றிக் கூறும் சிறப்பான நூல்களாகும்.

சித்த மருத்துவம் எங்கு எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறமுடியாது. அது பாரம்பரி ய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது. எனினும் இவ் வைத்தியத்தின் பாரம்பரி யம் வேதத்தின் கடைசி வேதமான அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளதாகக் அறியமுடிகின்றது. அத்துடன் பழந்தமிழர் காலத்திலும் இம் மருத்துவமானது வளர் ச்சியுற்றிருந்தமை பற்றி எமக்கு கிடைக்கப்பெற்ற இலக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொள்ளமுடியும். அவ்வகையில் அறநெறிக்காலமாகப் போற்றப்படும் சங்கமருவிய காலத்தில் எழுந்த வைத்திய நூல்களான திரி கடுகம்,  ஏலாதி, சிறுபஞ்சமூலம் முதலான நூல்களைக் குறிப்பிடமுடியும்.

இம் மருத்துவ முறையானது இயற்கையில் கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு உடலில் ஏற்படும் நோய்களைத் தீர்த்துக்கொண்டனர். சித்தர்கள் இம்மருத்துவத்தை மிகச்சிறந்த       முறையில் பேணிப்பாதுகாத்து வந்ததுடன் சிறந்த முறையில் நோய்களையும் தீர்த்து வந்துள்ளனர். எனினும் மருத்துவத்தைப் பெறுவதற்கும் உடலில் ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்குமான கடவுள் காணப்பட வேண்டும். அவ்வாறு சித்தமருத்துவத்தில் சித்த மருத்துவர் களால் கடவுளாக போற்றப்படுபவர் தன்வந்திரி    ஆவார். இவர் சித்தமருத்து பாரம்பரி யத்தில் முக்கியம் பெறுகிறார். அத்துடன் இவருடைய மருத்துவம் விஞ்ஞான உலகத்தில் இன்றும் இணைக்கப்பட்டு வருவதைக் காணமுடிகிறது. எனவே இங்கு நாம் இந்துக்களின் மருத்துவ பாரம்பரியத்தில் தன்வந்திரி யின் முக்கியம் பற்றி விரிவாகநோக்குவோம்.

தன்வந்திரியின் தோற்றம்

தன்வந்திரி  இந்துமதத்தில் உடல் நலத்திற்காக வழிபடப்படும் வடிவங்களுள் ஒன்றாகக் காணப்படுகின்றார்.  இவரை வி~;ணு பகவானின் 12வது அவதாரமாகக் கொள்கின்றனர். எனினும் இவ்வடிவத்தை தசவதாரத்திற்குள் சேர்ப்பதில்லை. பெரும் புகழ் வாய்ந்த வி~;ணு ஆலயங்களில் தன்வந்திரிக்கென தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவர்களின் மருத்துவர் எனவும் சித்தமருத்துவத்தின் கடவுள் என்றும் அழைக்கப்படுகின்றார். சுஸ்ருதரின் குரு தன்வந்திரி   என்ற குறிப்புக்களும் காணப்படுகின்றன. புராணங்கள், ஹரிவம்சம் மற்றும் மருத்துவ நூல்களில் வெவ்வேறு காலப்பகுதியில் மூன்று தன்வந்திரிகள் இருந்ததாக குறிப்புக்கள் கூறுகின்றன. அவ்வகையில்

1.         பிரம்ம கைவர்த்தன புராணம் பாஸ்கரரின்(சூரியன்) 16 மாணவர்களில் ஒருவரும் அவரிடம் ஆயர்வேதத்தைப் பயின்ற மாணவர்.

2.         நிவோதாஸ என்னும் காசி அரசன்

3.         விக்கிரமாதித்தன் அரசசபையில் வீற்றிருந்த நவநாயகர்களில் ஒருவரான தன்வந்தரி.

தன்வந்திரி   பற்றிய குறிப்புக்களைக் எம்மால் காணமுடிகின்றது.

தன்வந்திரி   தோற்றம் பற்றிய கருத்துக்களும் இந்துக்கள் மத்தியில் காணப்படுகின்றன.  குறிப்பாக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பொழுது தன்வந்திரி   பகவான் தோன்றினார் என்கின்றனர் .   அத்தோடு பாற்கடலைக் கடைந்த போது கிடைக்கப்பெற்ற அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தியவாறு தோன்றினார். எனப் பல குறிப்புக்கள் தன்வந்திரி   பகவானின் அவதாரம் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவர் ஏந்திய அமிர்தத்தை அருந்துபவர்கள் இறக்கும் நிலையிலும் நித்திய வாழ்வைப் பெறுவார்கள் எனவும் கூறப்படுகின்றது.

பிரம்ம கைவர்த்தன புராணத்தில் கூறப்பட்டுள்ளது போன்று சூரியனின் 16 மாணவர்களுக்கு போதித்தார் என்கின்றனர். அம்மாணவர்கள்  தத்தமது பங்களிப்பாக ஆயுர்வேதம் தொடர்பான நூல்களை இயற்றினர் அவர்களில் தன்வந்திரி மிகப்பெருமைக்குரியவராகவும் பிரபல்யமானவராகவும்  காணப்பட்டார்.  தன்வந்திரி  பகவான் பற்றி ஹரிவம்ச புராணம் பின்வருமாறு கூறுகிறது பரத்வாச முனிவர் தன்வந்திரிக்கு ஆயர்வேதத்தைக் போதித்ததாகக் கூறுகின்றது.             அவ்வாறு போதிக்கப்பட்ட ஆயர்வேத சிகிச்சையின் சிறப்புக்கள் காரணமாக அதனை 8 அங்கங்களாக வகையீடு செய்துள்ளார் என்ற கருத்தும் உரைக்கப்படுவதை அவதானிக்கலாம். 8 வகையீடுகளாவன

1.         காயசிகிச்சை

2.         பாலசிகிச்சை

3.         சல்லிய தந்திரம்

4.         இரசாயன தந்திரம்

5.         பாலசிகிச்சை

6.         சாலாக்ய தந்திரம்

7.         வி~ தந்திரம்

8.         வஜிகரண தந்திரம்

என்பனவாகும். இவற்றை அ~;டாங்க ஆயர்வேதம் எனவும் அழைக்கின்றனர்.

தன்வந்திரி சிகிச்சை முறைகள்

இந்து மருத்துவ பாரம்பரியத்தில் தன்வந்திரியின் சிகிச்சை         முறைகள் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. குறிப்பான இவரது பெயரே சிகிச்சை தொடர்பான பொருளைக் கொண்டதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தனு என்ற வார்;த்தைக்கு அம்பு, உடலைத் தைத்தல் என்கின்ற பொருள்களில் கொள்ளப்படுகின்றன.  எனவே தன்வந்திரி என்ற பெயருக்கு அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர்என்ற பொருள் கொள்வதை அவதானிக்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட தன்வந்திரியின் அ~;டாங்க ஆயர்வேதம் தொடர்பான மருத்துவ அறிவை தன்வந்திரி மாணவர்களுக்குப்              போதித்து நூல்களையும் எழுதியுள்ளனர் எனக் குறிப்பிடப்படுகின்றது. அவற்றில் சிகிச்காதத்துவ விஞ்ஞானம், சிகிச்சை தரிசனம் என்னும் நூலினை திவோதாஸ தன்வந்திரி எழுதினார். அத்துடன் சிகிச்சா           கௌமுதி எனும் மருத்துவ நூலை காசிராஜன் எழுதினார் எனவும் பிரம்ம கைவர்த்தன புராணம் குறிப்பிடுகின்றது. ஆயர்வேதம் பற்றிய             பொதுவான கருத்துக்களையும் சல்லி மற்றும் சாலாக்கிய தந்திரம் பற்றிக் குறிப்பிடும் நூலாகவும் இன்று வரை கிடைக்கக்கூடியதாகவும் பயன்படுத்தக்கூடிய நூலாகவும் காசிராஜ திவோதாஸ தன்வந்திரியின் கருத்துக்களையும் எடுத்துக் கூறும் முதன் நூலாகக் கொள்ளப்படுவது காசிராஜனின் முதல் மாணவனான சுஸ்ருதரின் சுஸ்ருத சம்ஹிதை        ஆகும். இதனை ஆதாரப்படுத்துவதாக இந்நூலின் ஆரம்ப சுலோகங்கள் உறுதி செய்கின்றன. இவற்றுடன் அக்னிவேஸ சம்ஹிதை, ~;டாங்க ஹிருதயம் போன்ற நூல்களிலும் தன்வந்திரியின் கருத்துக்கள் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றன.

திவோதாஸ தன்வந்திரி மனிதனின் நீண்டகால வாழ்விற்காக பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளார். இந்திய மரபில் கி.மு        காலங்களில் மருத்துவம் சத்திரசிகிச்சை என்பன உயிரியல்           விஞ்ஞானம் அல்லது ஆயுர்வேத விஞ்ஞானம் உள்ளடலங்களாக              பெரு வளர்ச்சியைப் பெற்றிருந்தது. இவ்வாறு வளர்ச்சி பெற்றிருந்த காலகட்டங்களில் உயிர் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைக் குறிப்பனவாக அமைந்திருந்தன. தாவரங்கள், மிருகங்கள், மனிதன் என்பனவே ஆகும். அவற்றில் உயிர் வாழ்க்கை பற்றியதான அறிவாகவே ஆயுர்வேதம் காணப்படுகின்றது. ஆகவே மனிதனானவன் இவ் ஆயுர்வேதத்தின் உதவியினால் நீண்டதான உயிர் வாழ்க்கையைப் பெறமுடியும் என ஆயுர்வேதத்தின் சிறப்புப் பற்றிக் திவோதாஸ தன்வந்திரி குறிப்பிடுகிறார். இவரது இக்கருத்தானது முற்றுமுழுதாக ஆயுர்வேத மருத்துவமே மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று என்ற கருத்தை முன்வைப்பதோடு ஆயுர்வேதத்தின் சிறப்பினையும் எடுத்துக்காட்டுவதை அவதானிக்கலாம். ஆயுர்வேதமானது  இயற்கையால் விளைந்த அறிவு என்பதையும் புலப்படுத்துகிறார்.

தன்வந்திரி நோய் நிவாரண மருத்துவம் தொடர்பான கருத்துக்களையும் முன்வைத்துள்ளமையை எம்மால் அறியமுடிகி;றது. தன்வந்திரி நோய் நிவாரண மருத்துவத்தை பரத்துவாச                முனிவருடன் இணைந்து 8 மருத்துவ முறைகளாக வகுத்தனர். நோய் நிவாரணிகளாக சல்லியதந்திரம், சாலாக்கியதந்திரம், பூதவித்யா, ரசாயண தந்திரம், வஜீகரண தந்திரம் முதலான எட்டு வகை மருத்துவ முறைகளைத் தன்வந்திரி வகுத்துள்ளார். இவ்எட்டு வகை மருத்துவ முறைகளில் காயசிகிச்சை எனும் பொது வைத்திய முறையை வேறுபடுத்தியுள்ளார். குறிப்பாக பொதுவைத்திய முறையை அதனோடு தொடர்புடைய பூததந்திரம், ரசாயண தந்திரம், வஜீரண தந்திரம் என்னும் முறைகளில் இருந்து சத்திரசிகிச்சை முறையான சல்லிய தந்திரம், சாலாக்கிய தந்திரம் ஆகியவற்றை வேறுபடுத்தியதுடன் அவற்றை சிறப்பு வைத்திய முறைகளாக விருத்தி செய்துள்ளார்.

சத்திரசிகிச்சை முறையினையும் தன்வந்திரி ஸ்தாபித்துள்ளார். சத்திரசிகிச்சை முறையை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் போதனையும் செய்து வந்துள்ளார். காலப்போக்கில் சத்திர                    சிகிச்சை முறைகளைக் கற்றுக்கொண்ட வைத்தியர்கள் அனைவரையும் தன்வந்திரி மருத்துவ சிந்தனா கூட்டத்தினர் என அழைத்ததாகக் கூறப்படுகின்றது. இதைப் போன்றே பகவான் புனர்வசு ஐதரேயர் என்பவரைத் தலைவராகக் கொண்ட                 இன்னுமொரு ஆயுர்வேத மருத்துவ முறையொன்றும் தாபிக்கப்பட்டதாக அறியமுடிவதுடன் இம்மருத்துவ கூடத்தை ஐதரேய ஆயுர்வேத           மருத்துவ சிந்தனா கூடம் எனப் பொதுவான பெயரால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

தன்வந்திரியின் காலத்தில் காயசிகிச்சை முறையானது சிறப்பு வாய்ந்ததொன்றாகக் காணப்பட்டுள்ளது. அக்னிவேஸ சம்ஹிதை காயசிகிச்சைக்குரிய அதிகாரபூர்வமான நூலாகக் கொள்ளப்               படுகின்றது. காசிராஜ திவோதாஸ தன்வந்திரி மற்றும் ஐதரேய              பகவான் என்பவருடைய காலத்தில் வாழ்ந்தார். வாழ்ந்ததோடு மட்டுல்லாமல் சத்திரசிகிச்சை தொடர்பாக அங்கீகரிக்கப்படவராகவும் திகழ்ந்தார். சத்திரசிகிச்சை செய்வதற்கான வைத்திய முறை இக்காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்படுகின்றது.  குறிப்பாக உடம்பிலுள்ள முக்கிய கூறுகளில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் எனும்               குறிப்புக்களும் குறிப்பிடப்படுகின்றன. வாய், தொண்டை, மூக்கு, காது,  கண் என்னும் கூறுகளில் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சை முறைகளாக காயடித்தல், காரத்திரிப் பிரயோகம் எனும் முறைகளில் வல்லுனர்களாகத் திகழ்ந்துள்ளனர். தற்காலம்                    போன்று மருத்துவ கல்வியை பூர்த்தி செய்ததன் பின்னர்                      அவர்களைப் பயிற்சிக்கு குறிப்பிட்ட காலத்திற்கு அனுப்பி வைக்கும் முறையும் அக்காலத்தில் காணப்பட்டதாக அக்னிவேஸ சம்ஹிதை குறிப்பிடுகின்றது. சத்திரசிகிச்சை முறைக்கு வித்திட்டவர் தன்வந்திரி என்பது இங்கு எமக்குப் புலாகின்றது.

இவர் காலத்தில் காயசிகிச்சை போன்றே மகப்பேறு சத்திர           சிகிச்சை முறையும் பெருவளர்ச்சி நிலையில் காணப்பட்டதாக அக்னிவேஸ சம்ஹிதை சான்று பகர்கின்றது. மகப்பேறு நோய்களுக்கும் அந்நோயைக் குணப்படுத்தும் சிகிச்சை முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

1.         அசாதாரண கர்ப்பம் காணப்படும் சந்தர்ப்பங்களிலும் தாயின் உயிருக்கு ஆபத்தேற்படும் சூழ்நிலையிலும் கருச்சிதைவு வைத்தியம் செய்தல்.

2.         அபூரணமான கருவளர்ச்சி ஏற்படும் நேரங்களில் குணப்படுத்தல்.

3.         உரிய காலத்தில் பிரசவம் நிகழாத சந்தர்ப்பத்தில் உடனடியாக நிகழ்த்தும் வைத்தியமுறை.

4.         கர்ப்பத்தில் குழந்தை நோயுற்றிருந்தால் அதனைச் சரிப்படுத்தும் வைத்தியம்.

5.         நஞ்சுக்கொடி தானாக வெளியேற சந்தர்ப்பத்தில் அதனை வெளியேற்றும் வைத்திய முறை.

6.         கர்ப்பத்தில் குழந்தை இறந்தால் அதனை வெளியேற்றும் வைத்தியம்.

 

மேற்குறிப்பிட்ட மகப்பேற்று வைத்திய முறைகளும் மனிதக் கருவின் உருவாக்கம், வளர்ச்சி தொடர்பான கருத்துக்களும் தன்                 வந்திரி உருவாக்கிய முறைகளாகும். இக்கருத்துக்கள் அக்னிவேஸ சம்ஹிதையில் மட்டுமல்லாமல் தன்வந்திரியின் மாணவரான சுஸ்ருதரின் சுஸ்ருத சம்ஹிதையிலும் இவ் வைத்திய முறைகள் தொடர்பான காணப்படுகின்றன.

 

தன்வந்திரி சத்திரசிகிச்சை தொடர்பான அறிவுறுத்தல்கள்                  பற்றிய கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார். சத்திரசிகிச்சைக்கு முன்பதாகவும் சிகிச்சை முடிந்த பின் செய்ய வேண்டியதுமான நடைமுறைகள் பற்றியும் அக்கறை கொண்டிருந்தார். சத்திர                சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஏற்பு வலித்தடுப்பு, காயங்களிற்கான பலவகை கட்டுத்துணிகளின் பயன்பாடு, வலி நிவாரணியாக மதுசாரம் கலந்த பானங்களைப் பயன்படுத்தல், எலும்பு முறிவு, மூட்டு விலகல் மருத்துவம், சிறுநீர்ப்பையில் உருவாகிய கல்லை அகற்றல், தோல் ஒட்டுதல் (Skin Grafting)  மூக்கறை வைத்தியம் எனும் மருத்துவங்களும் மருத்துவ முறைகளும் தன்வந்திரியின் மருத்துவத்தில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. இவற்றோடு மாலைக்கண் நோய்க்கான மருத்துவத்தில் ஆட்டீரலைப்              பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய குறிப்புக்களும் தன்வந்திரியின் மருத்துவ குறிப்புக்களில் காணப்படுவதை அறியமுடிகின்றது.

 

தன்வந்திரி வைதீக சமயத்தில் காணப்படும் அறுவகைத் தரிசனங்களில் ஒன்றாக விளங்கும் சாங்கிய மெய்யியலில் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார். எனினும் சாங்கிய கருத்தில் கருத்துடையவராக இருந்த போதிலும் நியாய தரிசனத்தின் தர்க்க முறைகளையும் எண்ணக்கருக்களையும் ஏற்றுக்கொண்டவராகவும் காணப்படுகின்றார். நியாய தரிசனத்தின் எண்ணக்கருக்களான திரவியம், குணம்,                    கர்மம், சாமானியம், விசேடம்,பாகம், சாம்யோகம், விபாகம் முதலானவை ஆரம்பகாலங்களில் போதிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது. தன்வந்திரி பகவானும் நியாய தரிசன எண்ணக்கருக்களைச் சார்ந்து இருந்தார் என்பதையும் அறியக்            கூடியதாக உள்ளது. குறிப்பாகத் தன்வந்திரி தனது மாணவர்களுக்கு மருந்துகளின் செயற்பாடுகளை நியாயதர்க்கம் என்பதனை அடிப்படையாகக் கொண்டு நியாயக் கொள்கையின் அடிப்படையில் அணுவும் பரமாணு தொடர்பான விளக்கங்களை உருவாக்கினார்.           மருந்துச் சரக்குகளின் உள்ளடக்கக் கூறுகள், அவற்றினுடைய அணுத்திரண்மக் கட்டமைப்பு, பௌதீக இரசாயண பண்புகள், உண்ணும் உணவும், குடிக்கும் மருந்துகளும் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள், இவற்றுடன் மருந்துகளின் செயற்பாடுகள், என்பவற்றை முறையே ரசம், குணம், வீரியம், விபாகம், பரபாவம் என்பவற்றின் அடிப்படையில் நியாயக் கொள்கையின் செயற்பாடுகளை மருத்துவத்துடன் இணைத்து அணுவும் பரமாணுவும் ஒன்று என்ற கொள்கையை உருவாக்கினார்.

 

இருந்தபோதிலும் தன்வந்திரி தனது ஆயுர்வேத ஆய்வுகளை        சாங்கிய கொள்கையினை அடிப்படையாகக் கொண்டே மேற்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. மனிதனது உடல்,         புலன்கள், உள்ளம், ஆன்மா என்னும் இயற்கை தொடர்பான சாங்கிய மெய்யியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டதுடன் பிரபஞ்சம் பற்றிய கொள்கையையும் சடம், மனம், புலன்கள் ஆகியவற்றின் பரிணாமம் தொடர்பான கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டே தனது மருத்துவ பரிணாமத்தை மேற்கொண்டார் திரவியம் தொடர்பான அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவராகவும் காணப்படுகின்றார். அத்துடன் மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையாகத் திரவியம் விளங்குவதாகவும் பிரிக்க முடியாத சமவாய தொடர்பின் அடிப்படையில் காரண காரிய தொடர்பு என்பவற்றைக் கொண்டு தன்வந்திரி தனது ஆயுர்வேத மருத்துவ முறைகளைக் கைக்கொண்டார்.

 

தன்வந்திரி முத்திரைகள் தொடர்பான சிகிச்சைகள் பற்றிக்           தன்வந்திரி 1000 எனும் தனது நூலில் விபரித்திருக்கின்றார். அவற்றில் விரல்களே முத்திரைகளை செயற்படுத்துவதில் பிரதான இடத்தை வகிப்பதாகக் குறிப்பிடுகின்றார். கட்டை விரல் நெருப்பு, சுட்டு விரல் காற்று, ஆகாயத்தை நடுவிரலும் நிலத்தை மோதிர விரல், சுண்டு விரல் நீரையும் குறித்து நிற்கின்றன. அஞ்சலி முத்திரை, லிங்க முத்திரை, ருத்ர முத்திரை, அனுசாசன் முத்திரை, கருட முத்திரை, முகுள முத்திரை, சுரபி முத்திரை, ஞான முத்திரை,குபேர முத்திரை, சங்கு முத்திரை, சுவகரண முத்திரை, யோனி முத்திரை, அபான முத்திரை, திருவினி முத்திரை,மோகினி முத்திரை, சோபினி முத்திரை முதலான முத்திரைகள் பற்றி விபரித்துள்ளார். இவற்றில் சுவகரண முத்திரை செயற்படும் முறை பற்றிப் பின்வருமாறு விளக்குகிறார்.

சாற்றுவது சுவகரண முத்திரையைக் கொண்டு

சங்கையுடன் சம்மென்று தியானஞ்செய்யில்

     பார்த்திபனே சதாகோடி மந்திரமுஞ்சித்தி

     சகலகலை சாத்திரமுஞ் சித்தி

     தோற்றியதோர் ஆதார மூலஞ்சித்தி

     திருவாசி ஆனதொரு வாசிசித்தி

     தோத்திரமாய் நின்றதொரு பூசைசித்தி

     சுகமான ஆறான முத்திரையுஞ்சித்தே

தன்வந்திரி வைத்தியம் 1000

 

சுவகரண முத்திரையான இம்முத்திரையை இரு கரங்களிலும் செய்து கண்களை மூடி மனக்கண்களால் புருவ மத்தியைப் பார்த்து சம்எனும் மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்தல் வேண்டும் என்கிறார். இதைச் செயற்படுத்துவதால் சகல சாத்திரங்களுக்கும் ஆதாரமான மூலப்பொருளும் சித்தியாவதுடன் வாசியும் சித்திக்கும் என்கிறார்.

அதே போன்று யோhனி முத்திரை செயற்படுத்தும் முறை பற்றியும் விளக்குகிறார்.

            செய்யப்பா யோனி முத்திரையைக் கொண்டு

      தீர்க்கமுடன் றீங்கென்றே தியானஞ்செய்யில்……”

தன்வந்திரி வைத்தியம் 1000

 

என ஒவ்வொரு விரல்களால் முத்திரைகளைப் பயன்படுத்தி நமது நலத்தைப் பேணுவதற்குத் தனது நூலினூடாகத் தன்வந்திரி விபரித்துள்ளமையை அவதானிக்கமுடிகின்றது.

 

இதில் யோனி முத்திரையை இரு கரங்களிலும் செய்து கண்களை மூடி மனக்கண்ணால் புருவ மத்தியைக் பார்த்து றீங்எனும் மந்திரத்தை செபிக்க வேண்டும். இதனால் தேவாதி தேவர்களுடன் அண்டமும் புவனமும் சித்தியாவதுடன் லட்சுமியும் பொன் பொருட்களும் மையமான சுழினையும் ஏற்படும்.

நிறைவுரை

கல்விக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு லட்சுமி, வீரத்துக்கு            பார்வதி, ஞானத்துக்கு தட்சிணாமூர்த்தி, காரிய வெற்றிக்கு ஆஞ்சநேயர் என மனிதன் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு கடவுளர்களை உருவாக்கியுள்ளான். கல்வி, வீரம், செல்வம் முதலான செயற்பாடுகளுக்கு மாத்திரம் கடவுளர்களை உருவாக்கவில்லை. நோய் தீர்க்கும் கடவுளாக தன்வந்திரியும் உருவாக்கப்பட்டுள்ளார்.                    ஆயுர்வேத மருத்துவ முறைகளுக்கெல்லாம் ஆதிக்கடவுளாக தன்வந்திரி காணப்படுகிறார். அத்துடன் சிறப்பு வாய்ந்த மருத்துவக் கடவுள் என்ற புகழுக்கும் உரியவராகக் காணப்படுகின்றார். வி~;ணுவின்            அவதாரமாகக் கொள்ளப்படுகின்றார்.தன்வந்திரி புகழ்வாய்ந்த           மருத்துவக் கடவுளாகவும் தற்கால அறுவைச் சிகிச்சை முறைகளுக்கும் மூலகர்த்தாவாக விளங்கியுள்ளார். ஒவ்வொரு கோயிலிலும்         சண்டேஸ்வர நாயனாருக்கு எவ்வாறு பரிவாரத் தெய்வமாகக் காணப்படுகின்றாரோ வி~;ணுவின் அவதாரமாகக்   கொள்ளப்படுகின்றார் அதன்காரணமாக உலகில் காணப்படும் வி~;ணு ஆலயங்களில் இன்றும் போற்றப்படுகின்றார்.

 

இவ்வாறான சிறப்புக்களைப் பெற்ற தன்வந்திரிக்கு இந்தியாவில் தனியான ஆலயமொன்றும் நிறுவப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. வேலூர் மாவட்டத்திலுள்ள கீழ்புதுப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் மூலிகைவனம், கோசாலை, ஆயுர்வேத மருத்துவம், யோக மையம், தியானமண்டபம், அன்னதான கூடம், பிரார்த்தனை கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்வியல் ஆராய்ச்சி மையமும், ~ன்மத பீடமாகவும் ஸ்ரீதன்வந்திரியின் ஆரோக்கிய பீடமும் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் ஸ்ரீதன்வந்திரி ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி திருக்கோயிலில் 29.11.2015 அன்று இரண்டாவது கும்பாபிN~கம் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

உடல்நலம் காக்கவும் வாழ்நாளில் நோய் தாக்கம் ஏற்படாமல் இருக்கவும் ஆயுட்காலம் முழுவதும் இப்பூமியில் நீடித்திருக்கவும் தன்வந்திரியை நோக்கி விரதம் இருப்பது தொடர்பாக வ~;ணு                     புராணம் கூறுகின்றது. ஆயுர்வேத சாஸ்திர முறைகளை உலகுக்கு உபதேசிக்க    வந்த தன்வந்திரியை உலக மருத்துவர்கள் மானசீக குருவாகவும் கடவுளாகவும் ஏற்று வணங்கி வருகின்றனர். ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்னதாக வரும் தேய்பிறை திரயோதசி அன்று விரதம் மேற்கொள்கிறனர். இன்று வரை விரதம் அனு~;டிக்கப்பட்டு வருகின்றது. வட இந்தியாவில் நடைபெறும் தன்ரேஸ் எனப்படும் தன்வந்திரியின் திரயோதசி விரதமானது இறந்தவரை வழிபடும் விரதமாக இல்லாமல் உயிருடன் இருப்பவர்களது ஆயுளை நீடிப்பதற்காக வழிபடும் விரதமாகக் கொள்ளப்படுகின்றது. அத்துடன் இலங்கையில் காணப்படும் புகழ் பெற்ற ஆலயமாகக் கருதப்படும் லக்~;மி நாராயணன் கோயிலில் தன்வந்திரிக்கென பரிவாரக் கோயில் காணப்படுகின்றது.

 

இவரால் முன்வைக்கப்பட்ட மருத்துவ முறைகளும் மருத்துவ பொருட்களும் இன்றுவரை சித்தமருத்துவத்திலும் ஆங்கில மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணமுடிகின்றது. குறிப்பாக தடுப்பூசி வழங்குதல், தோல் மாற்றும் சத்திர சிகிச்சை என்பன இவரால் முன்வைக்கப்பட்ட அறிவியல் சார்ந்த விஞ்ஞானமாகக் கொள்ளப்படுகின்றது. எனவே தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவ              முறைக்கு வித்திட்டவராகவும் இந்து மருத்துவமான ஆயுர்வேத மருத்துவத்திற்கு கடவுளாகவும் இன்றுவரை இந்துக்களால் போற்றப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

 

 

 

உசாத்துணைகள்

 

01.         இந்துக்கலைக்களஞ்சியம், தொகுதி ஏழு(ஞா தி), (2005), இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்துவமய அலுவல்கள் அமைச்சு.

02.         Temple.dinamalar.com/New.php?id=1604.

03.         Jothidasudarali.blogspot.com/2012/08/blog-post-7.html?m=1

04.         https://chinnaadhithya.wordpress.com/2013/09/03/kUj;Jt-gpjhkfd;-jd;te;jpup.

05.         Tamil.thehindu.com/Society/Spitituality/MAisf;$l;l-xU tpujk;/article 6482677.ece.

06.         www.nakkheeraiin/users/frmArticles.aspx?A=4506.

07.         http://siththargalom.blogspot.com./2013/03/1000.html?m=1

 

 

 

 

கருத்துகள் இல்லை: