புதுவையின் புதுஞாயிறு
புதுவையில் பூத்த பூக்காடு ,
பாரதியின் தாசனான பாவேந்தருக்கு
சமூக முன்னேற்றமே நாதம் !
தமிழினப்பற்றோ தாகம் !
புதுமைக்கும் புரட்சிக்கும் இவர்
முழங்கியதோ சங்க நாதம் !
பெண்களுக்குக் கல்வி வேண்டுமென
முழங்கிய புதுவை முரசு !
இயற்கையே சக்தி !
சக்தியே இயற்கை !
எனவியம்பிய இயற்கைக் கவிஞன் !
புதுவையின் புதிய ஞாயிறு ,
மூடப்பழக்கத்திற்குப்
போட்டதோ முட்டுக்கட்டை !
விதவா விவாகம் விதந்தோதிய
விந்தை மனிதர் !
தந்தைப் பெரியாரின் வழித்தோன்றல் !
ஆட்டுமந்தையாய்த் திரிந்தவர்களைப்
படிப்படியாய்ப் படிக்கச் சொல்லிப்
பாட்டுத் திறத்தால் பாதை
மாற்றிய பாமரக் கவிஞன் !
கண்டதையும் கிறுக்கும் கவிஞனல்லன் ,
கண்டெழுதும் கவிஞன் !
பொருளுக்காகப் பாடாது புகழுக்காகப் பாடாது
பொருளுடன் பாடிய கொள்கை
முழக்கக் குயில் !
புதுவைக் குயிலின்
புரட்சியைக் கொண்டுசேர்ப்போம்
புதியதோர் உலகம்
செய்யப் பூத்திருக்கும் புதிய
தலைமுறையினர்க்கு !
இரா. விஜயலெட்சுமி,
பட்டதாரி தமிழாசிரியை,
தி.சுக்காம்பட்டி 621 310.
மணப்பாறை கல்வி மாவட்டம்.
திருச்சி மாவட்டம்.
63829 93075.