4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 மார்ச், 2022

பெற்ற மனசு - தா.சரவணன்

 

பெற்ற மனசு

 

குருதியோட்டம் குன்றி

துடிப்பும் துவண்டு

நரம்பும் வறண்டு

தோலும் சுருங்கி

நாகூட உழறுது

 

வாக்கப்பட்டு போன மகள்

பெற்றெடுத்து

பேணி வளர்த்தவளை

ஒரு எட்டு பார்க்க

எந்நாளாகுமோ?

 

பார்வையை

காலம் வாங்கும் முன்

ஏக்கத்தோடு

எழுந்திரிச்சி

அவள் வாசலுக்கு

ஒரு எட்டு

அடியெடுக்க

ஊன்றுகோலும்

உதவியில்லையே!

 

என் கைபிடித்து

நடைபழகியவன்

தாரம் சொல்கேட்டு

சுக துக்கங்களுக்கும்

உறவில்லை என்று

உடன்பிறந்த

ஒரு தங்கையையும்

உதறி விட்டான் மகன்

 

பருவத்தில் பாடுபட்டு

சேர்த்ததெல்லாம்

மகளுக்கு சீராக

கொடுத்துவிட்டு

இங்கு சோற்றுக்கு

சொனங்குறன்னு

சாக்கு போக்கில்

சவுக்கடி வார்த்தைகளை

கொடுக்கும் மருமகள்

 

என் குறையை

யாரிடம் சொல்ல

இறைவா-என்

மரணத்திற்கு

ஆணையிடு

மணந்தவனிடம்

செல்ல...

 

 

தா.சரவணன்

கல்யாணமந்தை

திருவண்ணாமலை (மாவட்டம்)

தொடர்பு எண்:9786577516