அலைகழிப்பினூடான கற்பு
உன் அனுபவத்தினூடான இம்சையிலிருந்து
என் உள்ளழகு வெளிப்பட...
அதை பிராதனப்படுத்தி
அலைகழிக்கிறாய் நீ!
உனது இம்சையிலிருந்து
வெளிப்படும் சலனங்கள்
என்னோடான போதும்,
அதன் முன்னையும் பின்னையும்
வருணிக்கும் உரிமை எப்படி உனக்கானது?..
முடிதலை நாவருடி
தினிப்பினூடான முத்தத்தோடு...
அழுத்த அமர்த்தி...
புட்டம் முலைப்படச் சேர்த்தணைத்து...
காலத்தோடான கிழிபடு
சாத்தியம் மட்டும்
உனக்கெப்போதும் என்னோடு.
அப்போதும்
சன்னமான குரலதிர்வுகள்
மட்டுமே
மீதமானது எனக்கு!
இன்னும் இன்னும்
படுக்கைச் சந்திப்புகள் பாழ்கொள_
நிலைகொள்ளாமல் நீயும்;
இன்னதென
தெரியாமல்-முடியாமல் நானும்...
காற்றில் அலைந்து-அலைகழிந்து
பிரியும்
நமக்கான களவும் கற்பும்!