4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 மே, 2022

துளிப்பாக்கள் (ஹைக்கூ) - தா. சரவணன்

 


 

பட்டுப்போன மரம்

பூத்திருக்கிறது

பறவைகளால்

வறண்ட ஏரி

வளர்ச்சியடைந்த

கட்டடங்கள்

விலங்குகளின்

கதறல் சத்தம்

பற்றி எரிகிறது காடு

கண்டபடி திரியும் மனிதர்கள்

வரிசையில் நின்ற மரங்களை

வெட்டிவிட்டார்கள்

உண்ணாதிருந்து

உயிர்விட்டது மாடு

குடல் எங்கும் நெகிழிப்பை

 

தா. சரவணன்

கல்யாணமந்தை