பூக்கும் முறுவல் பேச்சுடனே
நிரவும் கதைகள் பலசொல்லி
நித்தம் சிரிப்பே மருந்தென்பார்
தரமாய்க் கம்பன் இளங்கோவை
சங்க இலக்கியச் செறிவதனை
உரமாய்த் தருவார் நகைகூட்டி
உறங்கி விட்டால் உலகென்செய்?
சிற்சபை வேண்டாம் என்றொதுக்கிச்
சிந்தை உறையும் தமிழொதுக்கி
பொற்சபை தேடிச் சென்றீரோ
பொன்னம் பலத்தான் பாதந்தான்?
சொற்சபை மன்றம் தவிக்கவிட்டுச்
சோகக் கனலில் மிதக்கவிட்டுப்
பற்சுவை கூட்ட நமனுலகில்
பறந்து விட்டீரோ சபேசரையா?
~ சுரேஜமீ