புதிய நாகரீகம்
எதையோ மறந்த நினைவுகளோடு
பழைய இயல்புகளை அப்புறப்படுத்திவிட்டு
புதிய நாகரிகம் திறந்தநேரம்...
நினைத்த மாதிரி
யாருக்கும் தெரியாமல்
நவீனமதை எடுக்கமுடியவில்லை.
அவதாரம் ஒவ்வொன்றும்
வெவ்வேறாய் அவதானிக்க
கோபித்துக்கொள்ள ஏதுமில்லை
இதில்
எதுவும் தெரியாத
மனித மிருகத்திற்கு
...
மைத்திரி அன்பு, காஞ்சிபுரம்