கந்தன் கருணை
சொந்தமும்
வேறில் லையே - முருகா
சொர்க்கமும்
உன்னிரு தாளே
சொர்க்கமும்
உன்னிரு தாளே!
முந்தைவினை
களைய வேண்டி
முற்றுமுனை
நம்பி வந்தேன்
சிந்தையிலே
உன்னைக் கொண்டேன் - ஐயா
எந்தையும்
தாயும் நீயே
எந்தையும்
தாயும் நீயே!
பந்தமெனும்
கட்டுக் குள்ளே
பாரிலெனைக்
கட்டி விட்டு
பந்தெனவே
ஆட்டு விக்கும் - பாலா
பரமனின்
குருவே வா!வா!
பரமனி்ன்
குருவே வா!வா!!
காய்ந்ததொரு
சருகைப் போல
காற்றின்
திசைசெல்ல லாமோ
காந்தமென
நீயி ருக்க - கந்தா
கட்டுமிரும்
பானேன் நானே
கட்டுமிரும்
பானேன் நானே!
சுரேஜமீ