4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூன், 2022

கந்தன் கருணை - சுரேஜமீ

 

கந்தன் கருணை



கந்தனின் அருளி லேயேல்

கண்டிலேன் பிறப்பை யானே

சொந்தமும் வேறில் லையே - முருகா

சொர்க்கமும் உன்னிரு தாளே

சொர்க்கமும் உன்னிரு தாளே!

 

முந்தைவினை களைய வேண்டி

முற்றுமுனை நம்பி வந்தேன்

சிந்தையிலே உன்னைக் கொண்டேன் - ஐயா

எந்தையும் தாயும் நீயே

எந்தையும் தாயும் நீயே!

 

பந்தமெனும் கட்டுக் குள்ளே

பாரிலெனைக் கட்டி விட்டு

பந்தெனவே ஆட்டு விக்கும் - பாலா

பரமனின் குருவே வா!வா!

பரமனி்ன் குருவே வா!வா!!

 

காய்ந்ததொரு சருகைப் போல

காற்றின் திசைசெல்ல லாமோ

காந்தமென நீயி ருக்க - கந்தா

கட்டுமிரும் பானேன் நானே

கட்டுமிரும் பானேன் நானே!

 

 சுரேஜமீ