4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஜூலை, 2022

சொல்ல வேண்டி… - மைத்திரி அன்பு

 

சொல்ல வேண்டி

கொஞ்சம் கலக நினைவலைகளைக்

தூர நிறுத்தி….

விடியலுக்குப் பின் வந்துபோனது

அதிகாலைத் தூக்கம்!

அதற்குள்ளும்

நினைவுக் கூட்டங்கள்

கனவுகளாய் பிரதியெடுக்க

 

கைக்கெட்டிய நிலவும்

கண் பாரா கதிர்வீச்சும்

முகத்தின் முன் விரிப்பிட….

இரு சருகென

வந்தது விழிப்பு!

 

விழிப்பில் அதே பழைய

அறைவெளி

 

அர்த்தங்கள் அற்றுப்போன

என் நினைவுக்கும் கனவுக்கும்

ஒரு அர்த்தம் தர

முயற்சிக்குமா…?

இந்த

ஒரு கவிதை!