4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது... - பேரா.முனைவர் பி.அனுராதா

 பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது

வார்த்தைகள் வாய்ப்பிளக்கும்.

மௌனம் மொழியாகும். கடிகாரம் கொஞ்சி கொஞ்சி நகரும். 

விட்டுப்போன கண்ணிகளை விரல் தொடுக்கும்.

முழுதாய் முகம் மலர கண்கள் காத்திருக்கும். தொலைத்த நிமிடத்தைத் தோண்டி எடுக்கும்.

வலிகளை கொள்ளைக்கு அனுப்பச் சமரசம் சிம்மாசனம் அமைக்கும்.

சிதறிய துவலைகளில் முளைவிடும் மொத்தமும்..

வனங்கள் பூங்காக்களின் பதாகைகளைப் பறைசாற்றும்.

தொலைத்த நொடிகளை தேடிக் உணர்ந்திடக் கடிகாரம் பின்னோக்கி

கொஞ்சி கொஞ்சி நகரும். என்றோ எப்போதோ வேளைகளை மூளைச் சலவைக்கு முழுதாய் அனுப்பிடுவோம்.

உன் நாற்காலிகள்

உடைக்கப்படும் எனக்காக....

 

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது...

பேரா.முனைவர் பி.அனுராதா
KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி , அரசூர்கோவை -641407