4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

வள்ளலாரின் வெளிச்சம் - முனைவர் கோ.வ.பரத்வாஜ்,

 

வள்ளலாரின் வெளிச்சம்

 

கிழக்கு ஒளி

 

எதனையோ கால்களால் கதிரவனின்

நடை மேற்கு வரை

அதை நகர்த்திய ஞாயிறு தான்

எல்லையில்லா

அரும்பெரும் ஜோதி..

 

பிறை ஒளி

 

மழலைகள் சாப்பிடும் கிண்ணத்தில்

ஆறாம் விரல் போல்

அண்ணக்குத்தியால் வந்து ஊட்டும்

அரும்பெரும் ஜோதி..

 

நட்சத்திர ஒளி

 

இருபத்தி ஏழு பெயருக்கு

தானாமேற்பட்டவர்களுக்கு

மாறாத ஒரே பெயர்ச்சி

அரும்பெரும் ஜோதி..

 

ஞான ஒளி

 

மூன்றடுக்கு சிந்தனையைப் புடைத்து

பன்முகமாக்கிய

வாழ்க்கையின் அரும்பெரும் ஜோதி..

 

தண்ணீர் ஒளி

 

நெருப்புக் குமிழியைத் தண்ணீர் மேலிட்டு

இல்லத்தின்

இருளை ஒழித்த அரும்பெரும் ஜோதி..

 

மின்னல் ஒளி

 

கரிய இருளில் இமைகள் சிமிட்டாத

போது

மூன்றாம் இமையாகி இமைக்கச் செய்த

அரும்பெரும் ஜோதி..

 

இரகசிய ஒளி

 

குழந்தையில் அம்பலத்தானின்

ஆரத்தியைக் கண்ட நகைப்பு ஒரு

ஜான் வயிற்றின் எரிப்பை ஆத்திய

அணையா அரும்பெரும் ஜோதி..

 

வாடிய பயிர்களே நீங்கள் செழுமையாக

வாழ்க்கையில் வெளிச்சத்தை

வள்ளலார் கண்டதுபோல்

நாமும் காண்போம்..

 

- முனைவர் கோ.வ.பரத்வாஜ்,