கற்பனை
உளர்ந்தேனும்…..
உருகுளைந்தேனும்……
இணக்கம் அறியாமல்
பல நூறு ஆண்டுகளுக்குப்
பிறகேனும்…..
பூத்துவிடும்
ஒரு குறிஞ்சிப் பூவென
எதிரான நம்பிக்கையில்..?
நனைந்தவாறு
தனிமை தவமிருக்க
இசைவுற்றேன் நான்!
இசைவுறச் செய்தாய் நீ!!
எந்தக் கற்பனைக்கும்
ஒரு
உவமை இட்டு நிரப்பப்படலாம்
எழுத்துக்கள் ஒவ்வொன்றும்
த னி த் த னி… …ஆக,,,,!
அத்தனை பஞ்சமிருக்கு
பரஸ்பரத்தினூடாக….
என்ன எழுத? எதை எழுத??
எப்படியெல்லாம் எழுத?
ஏது மற்றதாய் – ஏது மறியாதவாய்
அலைந்து திரிந்தேனும்
எழுத விழைகிறேன்!
அன்பின் மேலீட்டில்
ஆறுதல் அறந்த நிலையில்
அரவணைப்பை எதிர்ப்பார்த்து!