4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 நவம்பர், 2022

குறளெனும் அணிகலன் - முனைவர் சித்ரா (ஹாங்காங்)

 

கம்போடியாவில் நடந்த உலக திருக்குறள் மாநாட்டில் அன்றும் இன்றும் என்றும் என்ற தலைப்பில் நடந்த கவியரங்கத்தில் வாசித்த கவிதை.

 

குறளெனும் அணிகலன்

 

கசடற கூறும்  குறளாம் 

கல்விக்கு அதுவே அணியாம்!

 

நட்பை போற்றும் குறளாம் 

தோழமைக்கு அதுவே அணியாம்!

 

அறத்தைச் சாற்றும் குறளாம் 

ஆன்றோர்க்கு அதுவே அணியாம்!

 

மறத்தை மானமாக்கும் குறளாம் 

வீரருக்கு அதுவே அணியாம்!

 

ஒழுக்கத்தை விழுப்பமாக்கும் குறளாம்

சமூகத்திற்கு அதுவே அணியாம்!

 

அரசாண்மையை அறிவுறுத்தும் குறளாம் 

அரசியலுக்கு அதுவே அணியாம்!

 

வல்லமையை உறைக்கும் குறளாம்

வெற்றிக்கு அதுவே அணியாம்!

 

பெற்றோரை மதிக்கும் குறளாம் 

மக்களுக்கு அதுவே அணியாம்!

 

வாய்மையை உரைக்கும் குறளாம்

நம்பிக்கைக்கு அதுவே அணியாம்!

 

விருந்தோம்பலை விரும்பும் குறளாம் 

இல்லத்தார்க்ககு அதுவே அணியாம்

 

வானோரை வணங்கும் குறளாம் 

ஆன்மீகத்திற்கு அதுவே அணியாம்!

 

அன்றும் இன்றும் என்றும் 

நல்வாழ்விற்கு குறளே அணியாம் 

நல்வாழ்விற்கு வள்ளுவமே அணியாம்!

முனைவர் சித்ரா (ஹாங்காங்)