மதிப்பெண்
இன்று பனிரெண்டாம்
வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. எல்லோருள்ளும் ஒரு பதற்றம். வாணி தேர்வில் தோல்வியடைந்தாள்.
கிழவிக்கு ஒரே சந்தோஷம். டேய் குமரா! அவள அவ மாமன் மகன் ராசா கண்ணுக்கு கட்டி கொடுத்துடா
அவ நல்லா பொழச்சிப்பா. இனி அவளுக்கு படிப்பெல்லாம் வராது. சரி ஆத்தா அவங்களும் கேட்டுகுனுதான்
இருக்காங்க செய்தி போனது. பெண் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சாயிக்கப்பட்டது.
திருமணமும் சுபமாக நடந்தேறியது. மதிப்பெண் பட்டியல் வாங்க வருமாறு பள்ளியில் இருந்து
அழைப்பு கணவனுடன் சென்றாள். முதல் மதிப்பெண் பள்ளியில் . அதுவே அவளின் கடைசி மதிப்பெண்.